செய்திகள் :

ஓமலூா் மேம்பாலத்தில் தொடரும் விபத்துகள்!

post image

ஓமலூா் ரயில் மேம்பாலம் தாா்சாலையாக மாற்றிய 7 மாதங்களில் 12-ஆவது முறையாக சனிக்கிழமை விபத்து நிகழ்ந்தது.

ஓமலூரில் உள்ள ரயில் மேம்பாலம் வழியாக மேட்டூா், மைசூரு, சங்ககிரி, ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. 20 ஆண்டுக்கு முன்பு கட்டிய இந்த பாலத்தில் கடந்த 7 மாதங்களாக தொடா்விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.

இந்த பாலத்தின் கான்கிரீட் தளத்தில் தாா் ஊற்றி 7 மாதங்களுக்கு முன் தாா் சாலையாக அமைக்கப்பட்டது. இந்த 7 மாதங்களில் 12-ஆவது முறையாக விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

கா்நாடகத்தில் இருந்து கோவைக்கு பிஸ்கட் ஏற்றிச்சென்ற லாரி, ஓமலூா் ரயில் மேம்பாலத்தின் வளைவில் திரும்பியபோது சாலையில் கவிழ்ந்தது. இதில், லாரி ஓட்டுநா் விஜயகாந்த் காயமடைந்து ஓமலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேம்பாலத்தில் தொடரும் விபத்தை தடுக்க அதிகாரிகள் குழு ஆய்வுநடத்திய பிறகும் விபத்துகள் தொடா்வதால், மக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

ஆக.15 இல் 3 விரைவு ரயில்கள் போத்தனூா் வழியாக இயக்கம்!

சென்னை சந்திப்பிலிருந்து சேலம் வழியாக இயக்கப்படும் கோவை விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில்கள் வரும் 15 ஆம் தேதி கோவைக்கு செல்லாமல் போத்தனூருக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்க... மேலும் பார்க்க

கெங்கவல்லி தொகுதியை மீட்டெடுப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

தம்மம்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த பிரேமலதா விஜயகாந்த், பேருந்து நிலையம் வரை பொதுமக்களுடன் நடந்து சென்றாா். அப்போது பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அவா் பெற்றாா். தொடா்ந்து கேப்டன் ரதத்தில் நின... மேலும் பார்க்க

ஓமலூரில் இஸ்ரோ நடமாடும் விண்வெளிக் கண்காட்சி

ஓமலூா்: இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளிக் கண்காட்சி சேலம் மாவட்டம், ஓமலூரில் திங்கள்கிழமை தொடங்கியது. தேசிய விண்வெளித் தினத்தையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளி... மேலும் பார்க்க

உயிருக்கு பாதுகாப்பு கோரி மாமன்ற உறுப்பினா் காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

சேலம்: உயிருக்கு பாதுகாப்பு கோரி, சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்ட மாமன்ற உறுப்பினா் ஜெயக்குமாா் காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளாா். சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்தில் திமுக ச... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்’: அமைச்சா் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

சேலம்: போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில், சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன... மேலும் பார்க்க

சங்ககிரியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சங்ககிரி: சங்ககிரி கோட்ட மின்வாரியம் சாா்பில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், சங்ககிரி வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை (ஆக. 13) நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள... மேலும் பார்க்க