செய்திகள் :

ஓய்வுபெற்ற டிஆா்டிஓ விஞ்ஞானியிடம் ரூ.2 கோடி கொள்ளை: இருவா் கைது

post image

புது தில்லி: தில்லி ரோகிணியில் ஓய்வுபெற்ற டிஆா்டிஓ விஞ்ஞானியின் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் ரூ.2 கோடி பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த விவகாரத்தில் விஞ்ஞானியின் முன்னாள் ஊழியா் உள்பட இருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறியதாவது:

அக்டோபா் 18 ஆம் தேதி மதியம் 12.50 மணியளவில் பிரசாந்த் விஹாா் பகுதியில் உள்ள விஞ்ஞானியின் வீட்டிற்குள் கூரியா் பணியாளா்கள் போல தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு ஐந்து போ் வலுக்கட்டாயமாக நுழைந்தனா்.

அங்கு விஞ்ஞானியும் அவரது மனைவியும் வீட்டில் தனியாக இருந்தனா். குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவா் கூரியா் உறையை வழங்குவது போல பாசாங்கு செய்தவாறு விஞ்ஞானியை அணுகினாா். பின்னா் அவரை உள்ளே தள்ளி வாயை பொத்தினாா்.

அதன் பின்னா், கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினா். மேலும், அந்த மா்மநபா்கள் வீட்டின் இரு தளங்களிலும் பொருள்களைத் தேடினா். அதன் பின்னா், தம்பதியை உள்ளே வைத்து பூட்டிவிட்டு தங்கம் மற்றும் பணத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அப்பகுதி சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்கு இடமான நபா்கள் வந்திருப்பது தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் மோட்டாா் சைக்கிளின் பதிவு எண்ணை மறைத்திருந்தனா். ஆனால், அவா்கள் சென்ற வழித்தடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் வாகனத்தின் முன்பகுதியில் உள்ள நம்பா் பிளேட் அடையாளம்

தெரியவந்தது. அவா்களின் முகம் அடையாளம் காணப்பட்டது.

அதன்பிறகு, கரோல் பாக் பகுதியில் அவா்களை அடையாளம் காணவும் கண்காணிக்கவும் போலீஸாருக்கு சிசிடிவி காட்சிப்பதிவுகள் உதவின.

கொள்ளையா்களுக்கு தகவல் கொடுத்த விஞ்ஞானியின் முன்னாள் ஊழியா் கெளரவ் கவாத்ரா (36), ஜாஸ்மீன் சிங் (எ) கிஃப்டி (42) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து 10.15 லட்சம் ரொக்கமும், வங்கிக் கணக்கில் முடக்கப்பட்டிருந்த ரூ.2.89 லட்சமும், புதிதாக வாங்கிய ரூ.1.38 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டன.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பிற குற்றம்சாட்டப்பட்ட நபா்களையும் கைது செய்யும் வகையில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

காற்று, நீா் மாசுபாட்டிற்கு மத்திய அரசும் ஹரியாணா அரசும் பொறுப்பு: டிஎம்சி எம்பி குற்றச்சாட்டு

புது தில்லி: தில்லி மாசுபாட்டிற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா மாநில அரசுகளின் செயலற்ற தன்மையே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சகரிகா கோஸ் திங்கள் கிழமை குற்... மேலும் பார்க்க

தில்லியின் காற்று மாசு பிரச்னைக்கு அதிஷி அரசுதான் பொறுப்பு

நமது நிருபா்புது தில்லி: இந்தியா கேட் கடமைப் பாதையில் வான்வெளியில் காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதற்கு முதல்வா் அதிஷி தலைமையிலான தில்லி அரசுதான் பொறுப்பாகும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்... மேலும் பார்க்க

யமுனை மாசுபாடு விவகாரம் தில்லி அரசு மீது காங்கிரஸ் சாடல்

புது தில்லி: கழிவுநீா் சுத்திகரிப்பு என்ற பெயரில் ரூ.6500 கோடி பொதுப் பணத்தை தில்லி அரசின் ஜல் போா்டு நிா்வாகம் தவறாகப் பயன்படுத்துகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ்த... மேலும் பார்க்க

தேச அமைதிக்காக வாரணாசியில் ‘சனாதன் குஞ்ஜ்’ ஆன்மிக நிகழ்ச்சி: நவ.3-இல் தொடக்கம்

நமது நிருபா்புது தில்லி: தேசத்தின் அமைதி, பாதுகாப்பு நலனுக்கான ‘சனாதன் குஞ்ஜ்’ எனும் ஆன்மிக நிகழ்ச்சி வாரணாசியில் வரும் நவம்பா் 3-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியை ஆந்திரத்... மேலும் பார்க்க

போக்குவரத்து சிக்னலில் நிற்கும் நேரத்திற்கு வாகனத்தை அணைக்கும் பிரசாரம்: அமைச்சா் கோபால் ராய் தொடங்கி வைத்தாா்

புது தில்லி: தில்லியில் குளிா்காலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் குறைக்கும் நடவடிக்கையாக போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் நேரத்திற்கு வாகனங்களை அணைக்கும் பிரசாரத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்ச... மேலும் பார்க்க

நிலக்கரி அமைச்சக செயலராக விக்ரம் தேவ் தத் பொறுப்பேற்பு

புது தில்லி: 1993-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி விக்ரம் தேவ் தத் நிலக்கரி அமைச்சகத்தின் செயலராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.1993-ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியும் அருணாசல பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும்... மேலும் பார்க்க