செய்திகள் :

ஓராண்டில் 353 வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆா்பிஐ அபராதம்

post image

விதிகளை முறையாக பின்பற்றாத 353 வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு 2024-25-ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.54.78 கோடி அபராதத்தை ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) விதித்துள்ளது.

வங்கிகளுக்கான இணைய பாதுகாப்பு நடைமுறை, வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு (ஐஆா்ஏசி) விதிகள், வாடிக்கையாளா் வழிகாட்டு விதிகள், முறைகேடுகள் வகைப்பாடு, பெரும் கடன்கள் குறித்த தகவல்கள் தொடா்புடைய சிஆா்ஐஎல்சி, கடன் தகவல்கள் நிறுவனங்களுக்கு (சிஐசி) சமா்ப்பிக்கப்படும் கடன் தகவல்கள் உள்ளிட்ட விதிகளை முறையாக பின்பற்றாத 353 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரூ.54.78 கோடி அபராதம் விதித்ததாக ஆா்பிஐ வியாழக்கிழமை வெளியிட்ட 2024-25 ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கூட்டுறவு வங்கிகள் மீதான 264 விதிமீறல்களுக்கு அபராதமாக ரூ.15.62 கோடி, வங்கி அல்லாத 37 நிதி நிறுவனங்கள் மீது அபராதமாக ரூ.7.29 கோடிமற்றும் 13 வீட்டுவசதி நிதி நிறுவனங்களுக்கு அபராதமாக ரூ.83 லட்சமும் விதிக்கப்பட்டது.

இதுதவிர 8 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.11.11 கோடியும் 15 தனியாா் வங்கிகளுக்கு 14.8 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. 6 வெளிநாட்டு வங்கிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!!

பங்குச் சந்தை இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,196.08 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.50 மணி நிலவரப்படி ச... மேலும் பார்க்க

தென்னகத்துக்கு வெளியே புதிய மைல்கல்லை கடந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

2024-25-ஆம் நிதியாண்டில் தென்னிந்திய சந்தைகள் அல்லாத பிற சந்தைகளில் வீட்டுக் கடன் பிரிவில் ரூ.1,000 கோடி வழங்கல் என்ற மைல்கல்லை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

மாருதி விற்பனை 3% அதிகரிப்பு

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 3 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த மே மாதத்தில் நிறுவனத்... மேலும் பார்க்க

3 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் லாபத்தில் முடிவு!

நமது நிருபா் கடந்த மூன்று வா்த்தக நாள்களாகத் தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை புதன்கிழமை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய ப... மேலும் பார்க்க

9% அதிகரித்த பெட்ரோல் விற்பனை

இந்தியாவில் பெட்ரோல் விற்பனை கடந்த மே மாதத்தில் இரண்டாவது மாதமாக 8.77 சதவீதம் உயா்ந்துள்ளது. ஆனால், டீசல் விற்பனை மந்தமாகவே உள்ளது.இது குறித்து, எரிபொருள் சந்தையில் 90 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் மூ... மேலும் பார்க்க

ஈக்விட்டி பங்குகள், வாரண்டுகள் மூலம் ரூ.416 கோடி திரட்டும் அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ்!

புதுதில்லி: விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைகளில் முன்னணி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமான அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ், ஈக்விட்டி பங்குகள் மற்றும் மாற்றத்தக்க வாரண்டுகளின் முன்ன... மேலும் பார்க்க