செய்திகள் :

ஔரங்கசீப் கல்லறை அழிக்கப்பட வேண்டும்: சிவசேனை எம்.பி.

post image

மகாராஷ்டிரத்திலுள்ள முகலாய பேரரசர் ஔவுரங்கசீப்பின் கல்லறை அழிக்கப்பட வேண்டும் என சிவசேனை எம்.பி. மக்களவையில் பேசியுள்ளார்.

மக்களவையில் இன்று (மார்ச் 12) பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய சிவசேனை கட்சியின் தாணே மக்களவைத் தொகுதி உறுப்பினர் நரேஷ் ம்ஹஸ்கே, இந்தியாவில் மொத்தம் 3,691 முக்கிய தளங்கள் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ASI) அறிவித்துள்ளதாகவும் அதில் 25 சதவிகிதம் முகலாய மற்றும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு உரியது என அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் குல்தாபாத்திலுள்ள முகலாய பேரரசர் ஔவுரங்கசீப்பின் கல்லறை பாதுகாப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பிய அவர் ஔவுரங்கசீப், மகாராஜா சத்ரபதி சம்பாஜியை கொலை செய்ததுடன் ஹிந்துக்களின் கோயில்களை சூரயாடியதாகக் குற்றம்சாட்டினார்.

இதையும் படிக்க:சட்டவிரோத சூரிய ஒளி மின்சார வேலியினால் காட்டு யானை பலி!

இதுகுறித்து அவர் கூறியதாவது, ஔவுரங்கசீப் போன்ற கொடுமைக்காரர்களின் கல்லறை பாதுகாப்பபட வேண்டிய அவசியம் என்ன? அவரை போன்ற இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட அனைவரது நினைவுச் சின்னங்களும் அழிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.

முன்னதாக, சமீபத்தில் வெளியான நடிகர் விக்கி கௌஷலின் ‘சாவா’ திரைப்படத்தில் மராட்டிய மகாராஜா சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து அம்மாநிலத்திலுள்ள பேரரசர் ஔவுரங்கசீப்பின் கல்லறைக் குறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது!

புது தில்லியின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுபவர்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் போதைப் பொர... மேலும் பார்க்க

சட்டவிரோத சூரிய ஒளி மின்சார வேலியினால் காட்டு யானை பலி!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள தனியார் தோட்டத்தில் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது. அதிமங்கலா பகுதியிலுள்ள தனியார் எஸ்டேட் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த... மேலும் பார்க்க

படைகளைச் சந்திக்க எஸ்தோனியா செல்கிறார் இளவரசர் வில்லியம்!

உக்ரைனுக்கு ஆதரவாக எஸ்தோனியா நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் நாட்டு படைகளைச் சந்திக்க முதல்முறையாக அந்நாட்டுக்கு முடி இளவரசர் வில்லியம் பயணம் மேற்கொள்கிறார். ரஷியாவுடனான போரில் உக்ரைன் நாட்டுக்கு... மேலும் பார்க்க

முதல்வர் குறித்து அவதூறு விடியோ! 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்து அவதூறு பரப்பிய செய்தி தொலைக்காட்சியைச் சேர்ந்த 2 பெண் பத்திரிக்கையாளர்களை ஹைதரபாத் சைபர் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அம்மாநிலத்தின் பல்... மேலும் பார்க்க

உலகளவில் 56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது!

சட்டவிரோதமாக 56 மனித சிறுநீரகங்களைப் பெற்று அதனை விற்பனை செய்து கசகஸ்தானில் சிறைத் தண்டனை பெற்ற உக்ரேனிய பெண் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மனித உறுப்புகளைக் கடத்தும் கும்பல... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது! - அன்புமணி ராமதாஸ்

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மும்மொழிக் கொள்கையை... மேலும் பார்க்க