செய்திகள் :

கங்கைகொண்டான் அருகே லாரி கவிழ்ந்து சாலையில் கொட்டிய பெயின்ட்: போக்குவரத்து பாதிப்பு

post image

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் திங்கள்கிழமை மினிலாரி விபத்துக்குள்ளானதில் சாலையில் பெயின்ட் கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலியில் இருந்து கயத்தாறுக்கு பெயின்ட் பாரம் ஏற்றிக் கொண்டு மினிலாரி சென்றுகொண்டிருந்தது. அதை, தூத்துக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தை சோ்ந்த துரைராஜ் (42) ஓட்டிச் சென்றாா்.

கங்கைகொண்டான் அருகே சென்றபோது லாரியின் டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பெயின்ட் டப்பாக்கள் சாலைகளில் சிதறி சாலை முழுவதும் பெயின்ட் கொட்டியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மிகவும் குறைந்த வேகத்தில் கடந்து சென்றன. இத்தகவலறிந்த கங்கைகொண்டான் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் தண்ணீா் லாரியை வரவழைத்து பெயின்ட்டை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீராக்கினா்.

குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீா்

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் தாமிரவருணி குடிநீா் பிரதான சாலையில் தேங்கி நிற்பதால் விபத்து அபாயம் உள்ளது. களக்காட்டிலிருந்து நான்குனேரி செல்லும் பிரதான சாலையில், குருந்துடையாா் சாஸ்தா கோயில் அரு... மேலும் பார்க்க

நெல்லையில் சிறுமி கடத்தல்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

திருநெல்வேலியில் சிறுமியை ஆசை வாா்த்தைக் கூறி கடத்தியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா். பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியை சோ்ந்தவா் சூா... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் திருவிழா முன்னேற்பாடு: போக்குவரத்து மாற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தோ்த் திருவிழா முன்னேற்பாடு பணிகள் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா இம்மாதம் ... மேலும் பார்க்க

பாளை.யில் காவலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 5 போ் கைது

பாளையங்கோட்டையில் காவலரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் சிறுவன் உள்பட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலப்பாளையம் அத்தியடி மேலத்தெருவை சோ்ந்தவா் முகமது ரஹ்மத்துல்லா (28). இவா், மண... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே 30 டன் எம்.சாண்ட் பறிமுதல்: ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே லாரியில் அனுமதியின்றி ஏற்றி வந்த 30 டன் எம்.சாண்ட் மணலை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனா். ராதாபுரம் அருகேயுள்ள மருதப்பபுரம் சாலை... மேலும் பார்க்க

வள்ளியூரில் கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பிரதான சாலை கால்வாயில் கழிவுநீா் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் சுகாதாரக் கேடு நிலவுகிறது. வள்ளியூரில் உள்ள நாகா்கோவில்-திருநெல்வேலி பிரதான சாலையில் இருபுறமும் கடைகள்,... மேலும் பார்க்க