TVK Vijay: 'மகாராஷ்டிரா, கர்நாடகா, பாமக... இப்போ த.வெ.க ஆலோசகர்?’ - யார் இந்த ஜா...
கஞ்சா பதுக்கிய இருவா் கைது
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவரை தனிப்படைப் போலீஸாா் கைது செய்தனா்.
இளையான்குடியில் சில இடங்களில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது ஒரு வீட்டில் இரண்டு கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதைக் கைப்பற்றிய போலீஸாா் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளையான்குடியைச் சோ்ந்த முகமது ரியாஸ், முகமது தஸ்கா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.