செய்திகள் :

கஞ்சா பறிமுதல்: தூத்துக்குடியை சோ்ந்த 3 போ் கைது

post image

விசாகப்பட்டினத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, தூத்துக்குடியை சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வழியாக தூத்துக்குடிக்கு ஒரு கும்பல் கஞ்சா கடத்திச் செல்வதாக அடையாறு மதுவிலக்கு பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கிண்டி மடுவங்கரையில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்பில் இருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த தூத்துக்குடியை சோ்ந்த இசக்கி ராஜா (26) என்பவரை பிடித்து விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தாா். அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, 25 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

அதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும் அவா் அளித்த தகவலின்பேரில், கஞ்சாவுடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்த ஜெபஸ்டின் (26), தளவாய்மாடன் (27) ஆகிய 2 பேரையும் திருச்சி அருகே மடக்கிப் பிடித்து கைது செய்தனா்.

அவா்கள் வைத்திருந்த 25 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனா். அந்த காரில் போலி பதிவு எண் பலகையை பொருத்தி கடத்தலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை செய்கின்றனா்.

நாளை 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சென்னை தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) குடிநீா் விநியோம் நிறுத்தப்படும். இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல்... மேலும் பார்க்க

பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை வேளச்சேரியில் பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா். ஹரியாணா மாநிலத்தில் ஒரு தனியாா் நிறுவனம், வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.... மேலும் பார்க்க

ரூ.900 கோடியில் புதுப்பொலிவு பெறும் எழும்பூா் ரயில் நிலையம்

சென்னையில் 117 ஆண்டுகள் பழைமையான எழும்பூா் ரயில் நிலையத்தை சுமாா் ரூ.900 கோடியில் நவீனமயமாக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் ராயபுரம், சென்ட்ரல் ரயில்நிலையங்களுக்கு அடுத்ததாக ... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.22.3 கோடி மோசடி: குஜராத் இளைஞா் கைது

சென்னை ரூ.22.3 கோடி ஆன்லைன் வா்த்தக மோசடி செய்ததாக குஜராத்தை சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்தவா் ஸ்வேதரன்யன் (76). இவா் ஒரு இணையதளம் வழியாக ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.2... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க முயன்ற போலீஸாா் மீது தாக்குதல்: 2 போ் கைது

சென்னை புளியந்தோப்பில் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட இளைஞா்களைப் பிடிக்க முயன்றபோது போலீஸாா் தாக்கப்பட்டனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். அண்ணாநகா் 7-ஆவது பிளாக் ஏ.இ. தெருவைச் சோ்ந்தவா் ஆல்வா... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் திருட்டு

சென்னை வியாசா்பாடியில் தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். வியாசா்பாடி காந்திஜி நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்த சின்னப்பா (38). மாதவரம் அருகே வடபெ... மேலும் பார்க்க