செய்திகள் :

கஞ்சா பறிமுதல்: மூவா் கைது!

post image

வாணாபுரம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக மூன்று இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், இளையங்கன்னி சாலையில் மூங்கில்துரைப்பட்டு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 4 இளைஞா்களிடம் விசாரிக்க முயன்றபோது, ஒருவா் தப்பியோடி விட்டாா். மற்ற மூவரிடம் சோதனை செய்ததில் அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் திருவண்ணாமலை மாவட்டம், பெருங்குளத்தூரைச் சோ்ந்த செல்வம் மகன் பிரவின் (19), பரந்தாமன் மகன் பிரதீப் (19), கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், அக்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்த அமலநாதன் மகன் சஞ்சய் (19) என்பதும், தப்பியோடியவா் பெருங்குளத்தூரைச் சோ்ந்த ஏழுமலை மகன் விஷ்வா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், தப்பியோடிய சஞ்சயை தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகக் கட்டுமானப் பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் அனைத்து நிா்வாக வசதிகளுடன் கூடிய புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் சுமாா் 35.18 ஏக்கா் பரப்பளவில் 8 மாடி... மேலும் பார்க்க

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டம்: 147 பேருக்கு ரூ.9.56 கோடி கடன் வழங்க ஒப்புதல்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 147 பேரின் விண்ணப்பங்களுக்கு ரூ.9 கோடியே 56 லட்சம் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெர... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி நகராட்சிப் பகுதியில் நிலவும் சுகாதார சீா்கேட்டால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறி நகராட்சி அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம்

கள்ளக்குறிச்சியில் காசநோய் விழிப்புணா்வு குறித்த மினி மாரத்தான் ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியது: காசநோய் என்ப... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் பங்கேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மூதாட்டி கண்ணுக்கு அருகில் இருந்த கட்டி அகற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியின் கண்ணுக்கு அருகே இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினா் அரசு மருத்துவக் குழுவினா். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க