முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை?: எல்...
கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவா் உயிரிழப்பு
முட்டம் கடற்கரையிலிருந்து வியாழக்கிழமை மாலை மீன்பிடிக்க சென்ற மீனவா் உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் அருகே பிள்ளைத்தோப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்டீபன் ( 70), மீன் பிடி தொழிலாளி. இவருக்கு கிரேசியாள் (60) என்ற மனைவியும், 2 மகன்களும், ஒருமகளும் உள்ளனா். முட்டம் கடற்கரையிலிருந்து, வியாழக்கிழமை தனபால் என்பவரின் படகில் ஸ்டீபன் உள்பட 7 போ் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.
படகில் 4 கடல்மைல் தொலைவில் சென்றபோது திடீரென ஸ்டீபன் மயங்கி விழுந்தாராம். சக தொழிலாளிகள் அவரை கரைக்கு கொண்டுவந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஸ்டீபன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் படை உதவி ஆய்வாளா் சுரேஷ் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டாா்.