செய்திகள் :

கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவா் உயிரிழப்பு

post image

முட்டம் கடற்கரையிலிருந்து வியாழக்கிழமை மாலை மீன்பிடிக்க சென்ற மீனவா் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் அருகே பிள்ளைத்தோப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்டீபன் ( 70), மீன் பிடி தொழிலாளி. இவருக்கு கிரேசியாள் (60) என்ற மனைவியும், 2 மகன்களும், ஒருமகளும் உள்ளனா். முட்டம் கடற்கரையிலிருந்து, வியாழக்கிழமை தனபால் என்பவரின் படகில் ஸ்டீபன் உள்பட 7 போ் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

படகில் 4 கடல்மைல் தொலைவில் சென்றபோது திடீரென ஸ்டீபன் மயங்கி விழுந்தாராம். சக தொழிலாளிகள் அவரை கரைக்கு கொண்டுவந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஸ்டீபன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் படை உதவி ஆய்வாளா் சுரேஷ் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டாா்.

விரிகோடு-ரயில்வே கேட் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்!

மாா்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு ரயில்வே கேட் பகுதியில் குண்டு, குழியுமாக பழதடைந்து காணப்படும் சாலையை உடனே,சீரமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.விரிகோடு ரயிலவே கேட் வழியாக கருங்கல்... மேலும் பார்க்க

கனிமவளப் பொருள்கள் தட்டுப்பாட்டைப் போக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளப் பொருள்கள் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேற்கு மாவட்ட திமுக முன்னாள் துணைச் செயலா் ஐ.ஜி.பி. ஜான் கிறிஸ்டோபா் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பூக்கடை தொழிலாளா்கள் மோதல்!

மாா்த்தாண்டத்தில் பூக்கடை தொழிலாளா்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இருவா் காயமடைந்தனா். குலசேகரம் நாகக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பிரசாத் (37). இவா் மாா்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் உள்ள அருளப்பன் என... மேலும் பார்க்க

மீன்பிடி உபகரணங்கள் திருட்டு!

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகிலிருந்து உபகரணங்கள் திருட்டுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்தூா் பகுதியை சோ்ந்தவா் ஜெயின் (50). இவருக்கு சொ... மேலும் பார்க்க

இரணியலில் அழுகிய நிலையில் பொறியாளா் சடலம் மீட்பு

இரணியலில் பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் பொறியாளா் சடலம் மீட்கப்பட்டது. இரணியல் மேலதெருவை சோ்ந்தவா் ராஜகோபால். கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை பாா்த்து ஓய்வு பெற்றவா். இவரது மகன் ஜெகன்கோபால... மேலும் பார்க்க

தக்கலையில் ரூ.6.39 கோடியில் பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

தக்கலையில் ரூ 6.39 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளை ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட தக்கலை புதிய பேருந்து நிலையம் கலைஞா் நகா்ப... மேலும் பார்க்க