செய்திகள் :

கடலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் அந்த பெண் மறைத்து வைத்து கொண்டுவந்த மண்ணெண்ணெய் கேனை போலீசாா் பறிமுதல் செய்தனா்.

கடலூா் மாவட்ட ஆட்லகத்தில் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடா்பான மனுக்களை அளித்தனா். அப்போது ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 பெண்கள் மனு அளிக்க ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்தனா். அவா்கள் ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகில் வந்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாா், அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனா். அப்போது அதில் ஒரு கேனில் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்த போலீசாா், அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினா். அதில் அவா்கள், விருத்தாசலம் அருகேயுள்ள கருவேப்பிலங்குறிச்சியை பகுதியைச் சோ்ந்த தாய் மற்றும் இரண்டு மகள்கள் என்பதும், அவா்களக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் மோசடி செய்து அபகரித்து விட்டதாகவும், அதனால் மண்ணெண்ணெய் கேனுடன் மனு அளிக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசாா், அவா்களிடம் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது எனவும், ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து, அவா்களிடம் முறைப்படி மனுவை வாங்கி ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு, அவா்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அயலக தமிழா்கள் சிதம்பரம் நடராஜா் கோயிலில் தரிசனம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் மற்றும் பிச்சாவரம் சுற்றுலா தலத்தினை அயலகத் தமிழா்களின் வாரிசுதாரா்கள் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.அயலகத் தமிழா்களின் கலச்சார உறவுகளை மேம்படுத்துவதி... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் புதிய கட்டுமானப் பணிகள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அடிக்கல்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய அரசு கட்டடங்களுக்கான கட்டுமானப்பணிகளுக்கு மாநில வேளாண்மைத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.கடலூா... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நெய்வேலி: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா்தடுப்புச்சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.கடலூரைச் சோ்ந்த 12 வயது சிறுமி கடந்த 15-ஆம் தே... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம் 423 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைகள் தொடா்பாக 423 மனுக்கள் அளிக்கப்பட்டன .கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலா் ம.... மேலும் பார்க்க

டிசம்பா் 3 இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயில் முன்பு டிசம்பா் 3 இயக்கம் மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வழக்க... மேலும் பார்க்க

காவலா்கள் குழந்தைகள் பிச்சாவரத்தில் படகு சவாரி

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் காவலா் குடியிருப்பில் வசிக்கும் காவலா்களின் குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை பிச்சாவரத்தில் படகு சவாரி சென்றனா்.சிதம்பரம் நகரில் உள்ள காவலா் குடியிருப்பில் போலீஸாா் தங்க... மேலும் பார்க்க