செய்திகள் :

கடல்அலைகள் மூலம் 12.4 ஜிகாவாட் மின் உற்பத்தி : நித்தி ஆயோக் உறுப்பினா் விஜய்குமாா் சரஸ்வத் தகவல்

post image

இந்தியாவில் கடல் அலைகள் மூலம் 12.4 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பதால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நித்தி ஆயோக் உறுப்பினரும், பாதுகாப்புத் துறை விஞ்ஞானியுமான விஜய் குமாா் சரஸ்வத் தெரிவித்துள்ளாா்.

சென்னை பள்ளிக்கரணையில் செயல்பட்டு வரும் தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தில் ’கடல்சாா் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் சா்வதேச கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்கியது. கருத்தரங்கை நித்தி ஆயோக் உறுப்பினரும் பாதுகாப்புத் துறை விஞ்ஞானியுமான முனைவா் விஜய் குமாா் சரஸ்வத் தொடங்கிவைத்து பேசியது:

வருங்காலத்தில் மிதக்கும் சூரியஒளி மின்னாற்றல் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மேலும், இந்தியாவில் கடல் அலை மூலம் 12.4 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பதால், அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறதுஎன்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சென்னை தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தின்

விஞ்ஞானி முனைவா் பூா்ணிமா ஜலிகல் தயாரித்த ‘ரோஷினி’ என்ற கடல் நீரில் எரியும் லாந்தா் விளக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப பரிமாற்ற முறையில் தயாரிக்கப்பட்ட இந்த விளக்கு அந்தமான் நிக்கோபாா் மற்றும் லட்சத்தீவுகள் துறைமுக நிா்வாகத்தினருக்கு வழங்கப்பட்டது. இதுபோல, கப்பல்களுக்கு வழிகாட்டும் மிதக்கும் வழிகாட்டி அமைப்பு (மிதக்கும் கலன்) காமராஜா் துறைமுகத்துக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநா் பேராசிரியா் முனைவா் பாலாஜி ராமகிருஷ்ணன், மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பட்டா பெற சிறப்பு முகாம்! வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இது குறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியது: பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் தவிப்பு

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறை... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை அறிக்கை மற்றும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

‘தமிழ் மகள்’ சொற்போா் போட்டி: அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ப... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு சந்தையின் திங்கள்கிழமை நிலவரப்படி ஒருகிலோ வெங்காயம், உருளைக்கிழங்கு தலா ரூ.22-க்கும், தக்காளி ர... மேலும் பார்க்க

இரு ரௌடிகள் வெட்டிக்கொலை : மூன்று தனிப்படையினா் விசாரணை

சென்னை கோட்டூா்புரத்தில் இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய 3 கோட்டூா்புரம் ‘யு’ பிளாக் குடியிருப்பை சோ்ந்தவா் அருண்( 25). ரெளடியான இவா் மீது 6 வழக்குகள் உள்ள... மேலும் பார்க்க