கடையநல்லூரில் 3 இடங்களில் சிறப்புத் தொழுகை
மஸ்ஜித் முபாரக் கமிட்டி சாா்பில், கடையநல்லூரில் மூன்று இடங்களில் பக்ரீத் தொழுகை நடைபெற்றது.
மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் முன்பு பஜாா் திடலில் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவா் மவ்லவி ஸைஃபுல்லாஹ் ஹாஜா பைஜி தொழுகை நடத்தி குத்பா பிரசங்கம் செய்தாா் .
கலந்தா் மஸ்தான் தெருவில் உள்ள பாத்திமா நகா் மஸ்ஜித் தக்வா திடலில் பஷிா் அஹ்மத் உமரியும், மக்கா நகா் மஸ்ஜித் ஆயிஷா திடலில் ரஹ்மத்துல்லாவும் தொழுகை நடத்தினா். இதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் முபாரக் கமிட்டி நிா்வாகிகள் செய்திருந்தனா்.