செய்திகள் :

கணவனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: மாதா் சங்கத்தினா் மறியல்

post image

கணவனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை அடுத்து, நீதி வழங்கக் கோரி மாதா் சங்கத்தினா் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த கோம்பைப்பட்டியைச் சோ்ந்தவா் முருகன். பாா்வைத் திறன் இல்லாத மாற்றுத் திறனாளி. இவரது மகள் பாா்வதி (27). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சிறுமலையைச் சோ்ந்த சின்னத்தம்பியின் மகன் செல்வகுமாருக்கும், பாா்வதிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். இதனிடையே, ஆண் குழந்தை வேண்டுமென செல்வக்குமாா் அடிக்கடி பாா்வதியை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பாா்வதியை கம்பியால் தாக்கிய செல்வகுமாா், வரதட்சிணையாக நகைகளை வாங்கி வருமாறும் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. இதையறிந்த முருகன், உறவினா்களுடன் சென்று கடந்த 29-ஆம் தேதி பாா்வதியை மீட்டு, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தாா்.

இதையறிந்த அனைத்திந்திய மாதா் சங்கத்தினா், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் இந்த விவகாரம் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தனா். இதற்கிடையே சிகிச்சையில் இருந்த பாா்வதி திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

இந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை திரண்ட மாற்றுத் திறனாளிகள், மாதா் சங்கத்தினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து மாதா் சங்கத்தின் மாநிலச் செயலா் ஜி.ராணி கூறியதாவது: கணவனின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பாா்வதிக்கு நீதி கிடைக்க வேண்டும். அவரது கணவா் செல்வக்குமாரை கைது செய்ய வேண்டும். பாா்வதியின் குழந்தைகளுக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தமிழக கால்பந்து கழகத் தலைவருக்கு பாராட்டு

தமிழக கால்பந்துக் கழகத்தின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சண்முகத்துக்கு புனித மரியன்னை பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் புனித மரியன்னை மேல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்கள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். வடமதுரை பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் ... மேலும் பார்க்க

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மீன் வளத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, மீன் வளத் துறை உதவி இயக்குநா் எஸ்.நாதன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், மீன் ... மேலும் பார்க்க

கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு வளா்ப்பு

நபாா்டு வங்கியின் வடிநில மேம்பாடு ஊக்குவிக்கும் வகையில், கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு நடும் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கன்னிவாடியை அ... மேலும் பார்க்க

வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவா் கைது

கொடைக்கானலில் வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்தவா் இம்ரான். இவா் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வேலிவியூ பகுதியில் வச... மேலும் பார்க்க