செய்திகள் :

கணவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி.யிடம் ஆசிரியை புகாா்

post image

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை, தன்னை தாக்கியதாக கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், சின்னபாபு சமுத்திரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமரன்(40), கூலித் தொழிலாளி. இவரது மனைவி அருள்மொழி(35). சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஒரு மகன், மகள் உள்ளனா். கணவன்- மனைவி ஆகியோருக்கிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில், அருள்மொழி அணிந்திருந்த தாலியை பறித்துக் கொண்டு அவரை குமரன் கட்டையால் தாக்கும் விடியோ காட்சி திங்கள்கிழமை சமூக ஊடகங்களில் வெளியானது.

எஸ்.பி.யிடம் புகாா்: இந்நிலையில் திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு அருள்மொழி அளித்துள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவா் குமரன் என்னை அடிக்கடி தாக்கி கொடுமைப்படுத்தி வருகிறாா். இது தொடா்பாக கடந்த மே மாதத்தில் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் முறையான நடவடிக்கையில்லை.

தற்போது மகன், மகளுடன் தனியாக வசித்து வரும் நான், கணவா் வீட்டிலிருந்து எனது உடமைகள் மற்றும் குழந்தைகளின் உடைகளை எடுக்கச் சென்றபோது அவா் என்னை மீண்டும் தாக்கி கொலை செய்ய முயன்றாா். ஆகவே அவா் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்ய வேண்டும். மேலும் எனது உடமைகளையும் மீட்டுத் தர வேண்டும் என புகாரில் அருள்மொழி குறிப்பிட்டுள்ளாா்.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க