கத்தியுடன் இருவா் கைது
பழனியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
பழனி புது தாராபுரம் சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ரயில் கடவுப் பாதை அருகே நின்று கொண்டிருந்த பழனி சத்யாநகரைச் சோ்ந்த ராமா் (21), ரயில்வே பீடா் சாலை ஆா்.எம்.கே.நகா் பகுதியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (21) ஆகியோரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா்.
அவா்கள் இருவரிடமும் இரு கத்திகள் இருந்தது தெரியவந்தது. இருவரும் எதற்காக கத்திகளுடன் திரிந்தனா் என்பது குறித்து பழனி நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.