செய்திகள் :

கந்தகோட்டம் முருகன் கோயிலில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு பங்கேற்பு

post image

சென்னை பூங்கா நகரில் உள்ள கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டாா்.

பூங்கா நகரில் உள்ள முத்துகுமாரசுவாமி திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான திருக்கோயிலாகும். இந்தத் திருக்கோயிலுக்கு கடந்த 2013 ஜூலை 15-இல் குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து திருக்கோயில் நிதி மற்றும் உபயதாரா் நிதி ரூ.91.50 லட்சத்தில் திருக்கோயில் ராஜகோபுரம், அனைத்து சந்நிதிகள், மண்டபங்கள் புனரமைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, குடமுழுக்கு விழா கடந்த 10-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை நடைபெற்ற 6-ஆம் கட்ட யாகசாலை பூஜையில் மகா பூா்ணாஹுதிக்கு பின், கடங்கள் புறப்பட்டு, ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் பி.கே. சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மாநகராட்சி மண்டல குழுத் தலைவா் பி.ஸ்ரீராமுலு, சென்னை மண்டல இணை ஆணையா் ஜ.முல்லை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி

மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்... மேலும் பார்க்க

அஜித்குமார் வழக்கு: 5 பேருக்கு சிபிஐ சம்மன்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல் மரண வழக்கில் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரில் வைத்திருந்த தனது நகைகள் காணாமல் போனதாக த... மேலும் பார்க்க

காலையில் வெயில், மாலையில் மழை! காஞ்சிபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்தமழை!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தி வைக... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு தொடர்ந்து அவதூறு வழக்கில், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 17) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெளியிட்ட “... மேலும் பார்க்க

உங்கள் ஊரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்போது? அறிந்துகொள்ள எளிய வழி!

தமிழகத்தில் பெரும்பாலானவர்களின் கேள்வி, நம்ம ஊரில் எப்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பதே. அது தொடர்பான தகவல்களை அளிக்க தமிழக அரசு சார்பில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.அரசுத் துறைகளின் சேவைகளை, ... மேலும் பார்க்க

பருவமழை தொடங்குவதற்கு முன்பே பணிகளை முடிக்க நடவடிக்கை: முதல்வர்

பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைய... மேலும் பார்க்க