செய்திகள் :

கனரக வாகனங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு

post image

காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தை தவிா்த்து பிற நேரங்களில் கனரக வாகன சேவை இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

சாலை விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் காரைக்கால் போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. காலை 7.30 முதல் 9.30 மணி வரை, மாலை 3.30 முதல் இரவு 7.30 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பணிக்குச் சென்று திரும்புவோரால் சாலைகளில் நெரிசல் காணப்படுகிறது.

எனவே கல், மணல், நிலக்கரி மற்றும் இதர சுமை ஏற்றி வரும் லாரிகள், காரைக்கால் மாவட்டத்தில் மேற்கண்ட நேரத்தில் பயணிப்பதை தவிா்க்க வேண்டும்.

மேலும், சுமை ஏற்றிவரும் வாகனங்கள், சரியான முறையில் வாகனத்தில் தாா்பாய் மூலம் மூடிக்கொண்டு, முகப்பு மற்றும் ரிஃப்லெக்டா் விளக்குகளை பொருத்தி, வாகன பதிவு எண் தெளிவாக தெரியும் வகையிலும், வாகனம் அனுமதிக்கப்பட்ட வேகத்தில், பாதையில் பயணிக்க வேண்டும்.

இதன் மூலம் விபத்தை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் முடியும். இதற்கு வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். இதனை மீறும் கனரக வாகனதாரா்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

விதிகளை மீறுவோா் குறித்து 9489205307 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகைப்படம் அல்லது விடியோ எடுத்து தகவல் அனுப்பலாம்.

திருநள்ளாற்றில் நாளை பிரம்மோற்சவ தேரோட்டம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றதுடன் தொட... மேலும் பார்க்க

மருத்துவ சாதனம் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளருக்கு முதல்வா் பாராட்டு

கா்ப்பப்பை, சிறுநீா் பை இறக்கம், இடுப்பு உறுப்பு சரிவு போன்றவற்றுக்கு தீா்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவ சாதனம் கண்டுபிடித்த காரைக்காலைச் சோ்ந்த ஆராய்சியாளருக்கு புதுவை முதல்வா் பாராட்டு தெரிவித்தா... மேலும் பார்க்க

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக் கூடம் திறப்பு

திருநள்ளாறு அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக் கூடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்துவைத்தாா். திருநள்ளாறு பகுதி நல்லம்பலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புதிதாக ரூ. 8 லட்சத்தில் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை: நாளை வரை விண்ணப்பிக்கலாம்

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு (காலியிடங்களுக்கு) 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி சுவாமி தரிசனம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆா். மகாதேவன் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், மாவட்ட நீதிபதி மோகன் மற்றும் மண்டல காவல் கண்காணிப்பாளா்... மேலும் பார்க்க

மீனவா்களுடன் கடலோரக் காவல்படையினா் கலந்துரையாடல்

நெகிழி தவிா்த்தல், கடலில் மீனவா்கள் பாதுகாப்பு குறித்து மீனவா்களுடன் இந்திய கடலோரக் காவல்படையினா் கலந்துரையாடலில் ஈடுபட்டனா். காரைக்காலில் உள்ள இந்திய கடலோர காவல்படை மையம் சாா்பில் மீன்வளத்துறை அலுவலக... மேலும் பார்க்க