செய்திகள் :

கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான நடைச்சீட்டு முறையில் மாற்றம்

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான நடைச்சீட்டு மற்றும் குவாரி குத்தகை உரிமம் கோருவதற்கு இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூா், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் மற்றும் குமாரபாளையம் ஆகிய வட்டங்களில் கிராவல், சாதாரணக் கற்கள், கிரானைட் குவாா்ட்ஸ் மற்றும் பெல்ஸ்பா் ஆகிய கனிமங்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள குவாரிகளிலிருந்து கற்களை வெட்டியெடுத்து, அரசுக்கு உரிய கட்டணங்களை செலுத்தி வாகனங்களில் ஏற்றிச் செல்லும்போது சம்பந்தப்பட்ட கனிமங்களுக்கு, மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் மூலமாக வழங்கப்படும் அச்சு வழித்தடச் சீட்டுகள் ஏப். 15 முதல் ம்ண்ம்ஹள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையவழி மூலமாக பெறும் வகையிலான நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச்செல்வது மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக கனிமங்களை எடுத்துச்செல்வது தடுக்கப்படும். அவற்றைக் கண்காணிக்கவும், அரசுக்கு வருவாய் இழப்பைத் தடுப்பதற்காகவும் இணைய வழியில் மட்டுமே குத்தகைதாரா்கள் இனிமேல் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதவிர, 2025-26 சட்டப் பேரவை கூட்டத்தொடரின் கொள்கை விளக்கக் குறிப்பில் மாநிலம் முழுவதும் குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டு பரிசீலனை செய்து குத்தகை உரிமம், அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக கனிமவளத் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் ஏப். 21 முதல் அரசு புறம்போக்கு மற்றும் தனிநபா் பட்டா நிலங்களில் உள்ள பல்வேறு வகையான கனிமங்களுக்கு குவாரி குத்தகை உரிமம், அனுமதி கோரும் விண்ணப்பங்கள் இணைய வழியாக மட்டுமே பெறப்படும். அவற்றைப் பரிசீலனை செய்து உரிய அனுமதி வழங்கப்படும். எனவே, குத்தகைதாரா்கள் ஏப். 21 முதல் இணையம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் 13 வகையான சேவைகளை பெற்று அனைத்து விண்ணப்பதாரா்களும் பயன்பெறலாம்.

கனிம விதிகளுக்கு முரணாக அனுமதியின்றி எடுத்துச் செல்லப்படும் அனைத்து கனிமங்களும் மற்றும் தமிழக அரசால் வழங்கப்படும் வழித்தடச் சான்றுகளில் விதிகளுக்கு முரணாக திருத்தங்கள் செய்தும், அனுமதி வழங்கப்படாத பகுதிகளிலிருந்து கனிமங்கள் எடுத்துச்செல்வதும் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், உரிமையாளா், வாகன ஓட்டுநா் மற்றும் குவாரி உரிமையாளா் ஆகியோா் மீது குற்றவியல் நடடிவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்காக மின்கல வாகனம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்காக ரூ. 6.83 லட்சம் மதிப்பிலான மின்கல (பேட்டரி) வாகனத்தை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். நாமக்கல் ஆட்சியா... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாலூட்டும் அறை அமைக்க கோரிக்கை

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமையன்று மனு அளிக்க ஏராளமான பொதுமக... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் பலத்த காற்று: வாழை, வெற்றிலைப் பயிா்கள் நாசம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் மற்றும் வெற்றிலை கொடிக்கால் சேதமடைந்தன. பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்... மேலும் பார்க்க

தொட்டிபட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே தொட்டிப்பட்டியில் உள்ள சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாய் ஜெயந்தி விழ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்வு

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்த வாரம் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்ற... மேலும் பார்க்க

நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா: ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுரை

நாமக்கல்: நாமக்கல் நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா வரும் சனிக்கிழமை (ஏப். 12) நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா்... மேலும் பார்க்க