செய்திகள் :

கன்னட மொழி குறித்து கமல் பேசியது உண்மை; சத்தியம்: சீமான்

post image

கன்னட மொழி குறித்து கமல் பேசியது உண்மை; சத்தியம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அண்மையில் நடந்து முடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சிவராஜ்குமாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பேசிய கமல்ஹாசன், “ சிவராஜ்குமார் குடும்பத்தினர் என் குடும்பம்தான். தமிழே உறவே என்றுதான் என் பேச்சை துவங்கினேன். தமிழிலிருந்து வந்ததுதான் கன்னடம்” என்றார்.

இப்பேச்சுக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கன்னட மொழி குறித்து கமல் பேசியது உண்மை; சத்தியத்திலும் சத்தியம். தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் எல்லாம் தமிழ் மொழியில் இருந்து வந்தவைதான்.

தன் வரலாற்றை தெரிந்து கொள்ளாத, உண்மையை உணராதவர்கள் அவரை எதிர்க்கின்றனர். இது தெரியாமல் பதாகையைக் கிழித்தால் கிழிக்கட்டும்” என்றார்.

இதையும் படிக்க: கர்நாடகத்தில் தக் லைஃப் பேனர்கள் கிழிப்பு... என்ன ஆனது?

நடிகர் ராஜேஷ் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!

மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ்(75) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசா... மேலும் பார்க்க

தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா; பதற்றம் வேண்டாம்.. என்ன செய்ய வேண்டும்?: மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் வகையிலான கரோனா தொற்றுப் பரவி வருகிறது. ஆனால், கரோனா குறித்து யாரும் பதற்றம் அடையத் தேவையில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ... மேலும் பார்க்க

இன்று ஒரே நாளில் அரசுப் பணிகளிலிருந்து 8,144 பேர் பணி ஓய்வு

சென்னை: இன்று தமிழக அரசுப் பணிகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 8,144 பேர் ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள்.இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் பணி ஓய்வு பெறுவது இதுவே முதல் முறையாகும் என்றும்,... மேலும் பார்க்க

கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி

கா்நாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாதெமி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மியூசிக் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: தமிழக கடலில் நெகிழி துகள்களை அகற்றுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

கேரள கப்பல் விபத்து எதிரொலியாக, தமிழக கடற்பரப்பில் நெகிழி (பிளாஸ்டிக்) துகள்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். கேரளத்தையொட்டிய அரபிக் கடலில் ‘எல்... மேலும் பார்க்க