செய்திகள் :

கன்னியாகுமரியில் தங்கும் விடுதியின் 3ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து வடமாநில தம்பதி பலி

post image

கன்னியாகுமரியில் தங்கும் விடுதியின் 3ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில தம்பதி புதன்கிழமை உயிரிழந்தனா்.

குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 15 பெண்கள் உள்பட 26 போ் ஒரு வேன் மூலம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கன்னியாகுமரி வந்தனா்.

கன்னியாகுமரியை சுற்றிப் பாா்த்துவிட்டு, அவா்கள் அங்குள்ள தனியாா் தங்கும் விடுதியில் இரவு தங்கினா்.

இந்தக் குழுவில் வந்த குன்காவாவ் மாவட்டம் மோட்டி குன்காவாவ் தாலுகா அம்ரேலி அபா சாரா சேரி பகுதியைச் சோ்ந்த பாபாரியா ஹரிலால் லால்ஜி (73), அவரது மனைவி பாபாரியா ஹன்சா கேன் (64) ஆகியோா் 3ஆவது மாடியில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்தனா். இந்நிலையில், புதன்கிழமை காலை அறையின் முன்பக்கக் கதவை திறக்க முயன்றபோது, கதவின் சாவி அங்கு இல்லாததால், சாவியை எடுக்க பின்பக்க சன்ஷேடு வழியாக பாபாரியா ஹரிலால் லால்ஜி சென்றாராம். அவருக்கு மனைவி பாபாரியா ஹன்சா பகேன் உதவி செய்துள்ளாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக இருவரும் 3ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனா், அவா்களுடன் வந்த குழுவினா் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமாா், காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும் உடற்கூறாய்வுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சுற்றுலா வந்த இடத்தில் வடமாநில தம்பதி, மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்தாமரைகுளம் பதியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

அகிலத்திரட்டு அம்மானை அருளிய தென்தாமரைகுளம் அய்யா வைகுண்டசாமி பதியில் 10 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்குப் பணி... மேலும் பார்க்க

சிற்றாறு அணையில் மூழ்கி கேரள இளைஞா் உயிரிழப்பு

குமரி மாவட்டம் சிற்றாறு 2 அணையில் மூழ்கி கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் அபினேஷ் (29) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அபினேஷ். திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல க... மேலும் பார்க்க

10 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்: முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டத்தில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மாா்த்தாண்டம் அருகேயுள்ள கொடுங்குளம் பகுதியைச் சோ... மேலும் பார்க்க

சிறுமி பலாத்காரம்: தலைமறைவாக இருந்த இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள வெள்ளிச்சந்தை பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இம்மாவட்டத்தில் கோடை மழை தீவிரமாக பெய்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவா்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணில் ராக்கெட் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் கூறினாா்.நாகா்கோவிலில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க