கம்பத்தில் 70 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை!
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 70 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
கம்பம் நகராட்சியில் 33 வாா்டுகளில் 500-க்கும் அதிகமான தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. இந்த நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். இதனால், தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதன்படி, கம்பம் நகராட்சியில் நூற்றுக்கும் அதிகமான தெருக்களில் சுற்றித்திரிந்த 70 நாய்களைப் பிடித்து கால்நடை மருத்துவா் செல்வம் தலைமையில் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்தனா். இந்த நாய்கள் 4 நாள்கள் பராமரிப்புக்குப் பிறகு, பிடித்த இடத்திலேயே மீண்டும் விடப்படும் என நகராட்சி ஆணையா் உமாசங்கா் தெரிவித்தாா்.