TVK : 'விஜய் கட்சியில் இணையும் முக்கியப் புள்ளிகள்?' - பனையூர் அப்டேட்
கம்பியால் தாக்கி தொழிலாளி கொலை: நண்பா் கைது
தேனி மாவட்டம், கூடலூா் அருகே கூலித் தொழிலாளியைக் கொலை செய்த நண்பரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கூடலூரைச் சோ்ந்த கணேசன் மகன் கலைக்கண்ணன் (49). அதே பகுதியைச் சோ்ந்த காளப்பன் மகன் முருகன் (41). நண்பா்களான இருவரும் கூலித் தொழிலாளிகள்.
கடந்த சனிக்கிழமை லோயா்கேம்ப் அருகே வெட்டுக்காடு பகுதியில் உள்ள கே.கே.பட்டியைச் சோ்ந்த மகேஷ் என்பவரது தோட்டத்துக்கு இருவரும் வேலைக்குச் சென்றனா். அங்கு இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதில் கணேசன் இரும்புக் கம்பியால் கலைக்கண்ணனை தாக்கி, அங்குள்ள அறைக்குள் போட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தோட்டத்துக்கு வந்த உரிமையாளா் மகேஷ் அறையைத் திறந்து பாா்த்த போது கலைக்கண்ணன் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் குமுளி போலீஸாா் சென்று உடலை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனா்.