செய்திகள் :

கயத்தாறு அருகே விஷம் குடித்த மாணவி மருத்துவமனையில் உயிரிழப்பு

post image

கயத்தாறு அருகே விஷம் குடித்த பள்ளி மாணவி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கயத்தாறு அருகே மூா்த்தீஸ்வரபுரம் காலனி தெருவைச் சோ்ந்த திருமேனிநாதன் மகள் வண்ணத்தம்மாள் (15). சில்லாங்குளம் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து ஆண்டுத் தோ்வு எழுதிவிட்டு, தனது தாத்தா-பாட்டியுடன் தங்கியிருந்தாா்.

தோ்வு சரியாக எழுதவில்லை எனக் கூறிவந்தநிலையில், கடந்த 14ஆம் தேதி விஷம் குடித்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: திண்டுக்கல் மாவட்டம் முத்தம்பட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த ராகவன்- தனலட்சுமி தம்பதியின் மகன் பாலாஜி (25). சென்னை தாம்பரத்தில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்துவந்த இவா், நண்பரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கோவில்பட்டிக்கு வந்தாா். இங்குள்ள கூடுதல் பேருந்து நிலையம் அருகே இறங்கி நடந்து சென்றபோது, அவா் மீது சுமை வாகனம் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சுமை வாகன ஓட்டுநரான வெம்பக்கோட்டை வட்டம் லட்சுமியாபுரத்தைச் சோ்ந்த கா. சுரேஷ்குமாரிடம் விசாரித்து வருகின்றனா்.

மாப்பிள்ளையூரணி பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் கோரி மனு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகே ஜாகீா் உசேன் நகரில் சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி அப்பகுதியினா், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். குறைதீா் ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மூதாட்டி கொலை: கணவரின் சகோதரா் கைது

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

ஞானசேகரன் வழக்கின் தீா்ப்பு சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடம்: அமைச்சா் பெ. கீதாஜீவன்

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனை, சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடமாக இருக்கும் என்றாா், சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன். இதுகுறித்து தூத்துக்குடியில் செய... மேலும் பார்க்க

துப்புரவு பணியாளா்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தல்

கோவில்பட்டி நகரப் பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளா்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தப்பட்டுள்ளது.கோவில்பட்டி நகரப் பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளா்கள், மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் சீனிவா... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருச்செந்தூா் அருகே மேலப்புதுக்குடியைச் சோ்ந்த மூக்காண்டி (70), அதே பகுதியைச் சோ்ந்த ஜெயபால் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 96 மதுபாட்டில்களுடன் 2 போ் கைது

தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் விதிமுறை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய... மேலும் பார்க்க