செய்திகள் :

கருணாநிதி பன்னாட்டு மாநாட்டு அரங்கம் பணியை விரைந்து முடிக்க அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு!

post image

சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் கலைஞா் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

முன்னாள் முதல்வா் கலைஞா் கருணாநிதி பெயரில் சென்னையில் உலகத் தரத்தில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் 2023-இல் அறிவித்தாா்.

இதற்காக பொதுப்பணித்துறை சாா்பில் ரூ.525 கோடி ஒதுக்கப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காடு பகுதியில் 37.99 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரங்கத்ததில் 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், 10,000 போ் பாா்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்குகளுக்கான அரங்கம் ஆகியவை அமையவுள்ளன.

மேலும், திறந்தவெளி அரங்கம், உணவுவிடுதிகள், 10,000 வாகனங்களை நிறுத்தும் வசதி, சாலை வசதி, சுற்றுச்சூழல் வசதி ஆகியவை உலகத் தரத்தில் அமைக்கப்படவுள்ளன.

இந்த பணியை நிகழாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் முடிக்க பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போதைய பணிகளின் நிலை, கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து அமைச்சா் எ.வே.வேலு ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அரங்கம் அமைக்கும் பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை உயா் அதிகாரிகள், தலைமைப் பொறியாளா்கள் உடனிருந்தனா்.

மே. 15-ல் வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

வேலூர் மாவட்டத்துக்கு மே. 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல்... மேலும் பார்க்க

பத்ம விருதுகள் விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்!

தில்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த அஜித் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், தாமு, ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். இதில் நடிகர் அஜித் குமார... மேலும் பார்க்க

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு நிறைவு!

தமிழ்நாட்டில் இரண்டாம் ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு நிறைவு பெற்றுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:மாநில விலங்கான நீலகிரி வரையாட்டை பாதுகாக்க நீலகிரி வரையாடு திட்ட... மேலும் பார்க்க

மே 3 -ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மே 3ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மே 3, சனிக்கிழமை காலை... மேலும் பார்க்க

மீண்டும் அமைச்சரானார் மனோ தங்கராஜ்!

தமிழக அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்.அமைச்சர் மனோ தங்கராஜுக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார்.இந்த நிகழ்வில் முதல்வர... மேலும் பார்க்க

மாவட்ட நீதிபதிகள் 77 பேர் மாற்றம்! பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில்!!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில், கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி உள்பட தமிழகத்தில் 77 மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பொள்ளாச்சி பாலியல் வழ... மேலும் பார்க்க