செய்திகள் :

``கரும்பு விவசாயிகளிடம் வசூலித்த பணத்தை என்ன செய்தீர்கள்?'' - சரத்பவாருக்கு பட்னாவிஸ் கேள்வி

post image

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்டிடியூட் செயல்படுகிறது. புனே, சோலாப்பூர், கோலாப்பூர் மாவட்டங்களில் கரும்பு அதிக அளவில் விளைகிறது. இதற்கான ஆராய்ச்சியில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்டிடியூட் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் புதிய ரக கரும்பு ரகங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இதன் தலைவராக சரத்பவார் இருக்கிறார். துணை முதல்வர் அஜித்பவாரும் இதில் அறங்காவலராக இருக்கிறார்.

இந்நிறுவனம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிடம் ஒரு டன் கரும்புக்கு ஒரு ரூபாய் வசூலித்து வருகிறது. அந்த ஒரு ரூபாய்க்கு இப்போது மாநில அரசு முதல் முறையாக கணக்கு கேட்க ஆரம்பித்துள்ளது.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

இந்த சர்க்கரை ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடு குறித்து மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாநில சர்க்கரை கமிஷனர், வசந்த்தாதா சர்க்கரை ஆராய்ச்சி மையத்தில் வசூலிக்கப்படும் தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்து தணிக்கை செய்ய கமிஷன் அமைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனை பழிவாங்கும் நடவடிக்கை என்று தேசியவாத காங்கிரஸ் குற்றம் சாட்டி இருக்கிறது.

இது குறித்து சரத்பவாரின் பேரன் ரோஹித் பவார் கூறுகையில், ''1975-ம் ஆண்டு கரும்பு விவசாயிகளுக்காகவும், கரும்பு கூட்டுறவு சொசைட்டிகளுக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட வசந்த்தாதா சர்க்கை ஆராய்ச்சி மையத்தை மாநில அரசு களங்கப்படுத்தி இருக்கிறது. இது பா.ஜ.கவின் கீழ்த்தரமான அரசியலை காட்டுகிறது.

முதல்வரின் செயல் வழக்கமான ஒன்றாக தெரியவில்லை. இதற்கு முன்பு தானேயை குறி வைத்தார்கள். இப்போது பாராமதியை குறிவைத்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் அரசின் ஊழலுக்கு எதிரான சாட்சியங்களை கொடுக்கும்போது அரசு அமைதியாகிவிடுகிறது'' என்று குறிப்பிட்டார்.

ரோஹித் பவார்
ரோஹித் பவார்

ஆனால் விசாரணை நடத்த உத்தரவிடவில்லை என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "அந்நிறுவனத்திற்கு எதிராக எந்த புகாரும் வரவில்லை. ஆனால் அப்படி புகார் வந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்படலாம். சர்க்கரை ஆலைகளிடமிருந்து ஒரு டன்னுக்கு ஒரு ரூபாய் வசூலித்து அதனை என்ன செய்தீர்கள் என்று மட்டும் விளக்கம் கேட்டுள்ளோம்''என்று தெரிவித்தார்.

சர்க்கரை கமிஷனர் சஞ்சய் கோல்தே கூறுகையில், ''வசந்த்தாதா சர்க்கரை ஆராய்ச்சி மையத்திற்கு எதிராக எந்த புகாரும் வரவில்லை. ஆனால் அமைச்சரவையின் வேண்டுகோளின்படி சர்க்கரை ஆலைகளிடம் வசூலிக்கும் பணத்தை எப்படி செலவு செய்கிறார்கள் என்பது குறித்து தணிக்கை செய்ய கமிட்டியை அமைப்பதற்கான வேலையில் ஈடுபட்டு இருக்கிறேன்'' என்றார்.

முதல்வர் விஜய்யா? ADMK உடன் கூட்டணியா? - TVK Arun Raj Interview

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக தவெக நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரப் பயணம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதி நிகழ்ச்சி; `போலீஸ் விளக்கம் ஏற்க முடியாது; மத்திய அரசு உதவி நாடுவோம்'- வானதி சீனிவாசன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய திட்டமிடப்பட்டது. ... மேலும் பார்க்க

கேரளா: `பெண்களுக்கு மாதம் ரூ.1000'- புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு இப்போதே பல தாராள திட்டங்களை அறிவித்துள்ளார் கேரள முதல்வ... மேலும் பார்க்க

SIR மூலம் வாக்குத் திருட்டு; பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்

தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமாவிற்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தி... மேலும் பார்க்க

Trump: 'ரொம்பக் கெடுபிடியானவர்; போரை நாங்கள் தொடர்வோம் என்றார்'- மோடி குறித்து டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.தென் கொரியாவில் ஆசியா - பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ( APEC) தலைவர்கள் கல... மேலும் பார்க்க