செய்திகள் :

``கரும்பு விவசாயிகளிடம் வசூலித்த பணத்தை என்ன செய்தீர்கள்?'' - சரத்பவாருக்கு பட்னாவிஸ் கேள்வி

post image

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்டிடியூட் செயல்படுகிறது. புனே, சோலாப்பூர், கோலாப்பூர் மாவட்டங்களில் கரும்பு அதிக அளவில் விளைகிறது. இதற்கான ஆராய்ச்சியில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்டிடியூட் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் புதிய ரக கரும்பு ரகங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இதன் தலைவராக சரத்பவார் இருக்கிறார். துணை முதல்வர் அஜித்பவாரும் இதில் அறங்காவலராக இருக்கிறார்.

இந்நிறுவனம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிடம் ஒரு டன் கரும்புக்கு ஒரு ரூபாய் வசூலித்து வருகிறது. அந்த ஒரு ரூபாய்க்கு இப்போது மாநில அரசு முதல் முறையாக கணக்கு கேட்க ஆரம்பித்துள்ளது.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

இந்த சர்க்கரை ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடு குறித்து மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாநில சர்க்கரை கமிஷனர், வசந்த்தாதா சர்க்கரை ஆராய்ச்சி மையத்தில் வசூலிக்கப்படும் தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்து தணிக்கை செய்ய கமிஷன் அமைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனை பழிவாங்கும் நடவடிக்கை என்று தேசியவாத காங்கிரஸ் குற்றம் சாட்டி இருக்கிறது.

இது குறித்து சரத்பவாரின் பேரன் ரோஹித் பவார் கூறுகையில், ''1975-ம் ஆண்டு கரும்பு விவசாயிகளுக்காகவும், கரும்பு கூட்டுறவு சொசைட்டிகளுக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட வசந்த்தாதா சர்க்கை ஆராய்ச்சி மையத்தை மாநில அரசு களங்கப்படுத்தி இருக்கிறது. இது பா.ஜ.கவின் கீழ்த்தரமான அரசியலை காட்டுகிறது.

முதல்வரின் செயல் வழக்கமான ஒன்றாக தெரியவில்லை. இதற்கு முன்பு தானேயை குறி வைத்தார்கள். இப்போது பாராமதியை குறிவைத்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் அரசின் ஊழலுக்கு எதிரான சாட்சியங்களை கொடுக்கும்போது அரசு அமைதியாகிவிடுகிறது'' என்று குறிப்பிட்டார்.

ரோஹித் பவார்
ரோஹித் பவார்

ஆனால் விசாரணை நடத்த உத்தரவிடவில்லை என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "அந்நிறுவனத்திற்கு எதிராக எந்த புகாரும் வரவில்லை. ஆனால் அப்படி புகார் வந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்படலாம். சர்க்கரை ஆலைகளிடமிருந்து ஒரு டன்னுக்கு ஒரு ரூபாய் வசூலித்து அதனை என்ன செய்தீர்கள் என்று மட்டும் விளக்கம் கேட்டுள்ளோம்''என்று தெரிவித்தார்.

சர்க்கரை கமிஷனர் சஞ்சய் கோல்தே கூறுகையில், ''வசந்த்தாதா சர்க்கரை ஆராய்ச்சி மையத்திற்கு எதிராக எந்த புகாரும் வரவில்லை. ஆனால் அமைச்சரவையின் வேண்டுகோளின்படி சர்க்கரை ஆலைகளிடம் வசூலிக்கும் பணத்தை எப்படி செலவு செய்கிறார்கள் என்பது குறித்து தணிக்கை செய்ய கமிட்டியை அமைப்பதற்கான வேலையில் ஈடுபட்டு இருக்கிறேன்'' என்றார்.

Delhi Blast: "அந்தக் காட்சிகள் உண்மையிலேயே இதயத்தை உடைக்கின்றன" - மு.க.ஸ்டாலின் அறிக்கை!

டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: மும்பை, சென்னை, கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு; நிலைமையை ஆராயும் பிரதமர் மோடி!

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த சக்திவாய்ந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பிற நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல... மேலும் பார்க்க

Delhi Blast: 8 பேர் பலி; மோடி ஆய்வு; நாடு முழுவதும் பதற்றம்! | Live

தமிழகத்தில் பலப்படுத்தப்படும் பாதுகாப்புதமிழகத்தில் பாதுகாப்பு சோதனைகள்"டெல்லி பாதுகாப்பில் அலட்சியம்" - அரவிந்த் கெஜ்ரிவால் கவலைமுன்னாள் Delhi முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "ரெட் ஃபோர்ட் அருகே வெட... மேலும் பார்க்க

TN -ல் SIR -ஐ எதிர்க்கும் BJP, ஆதரித்து வழக்கு தொடுத்த ADMK | ECI EPS STALIN TVK | Imperfect Show

* SIR: "வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம்... அச்சமாக இருக்கிறது" - முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணம்* “SIR படிவங்களை அனைத்து வீடுகளுக்கும் வழங்க 8 நாட்களே போதும்” -எடப்பாடி பழனிசாமி* CAA-NRC-ஐ ஆதரித்த அ... மேலும் பார்க்க

``அதிமுக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை; கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார்கள்" - ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் டி எம் எஸ் எஸ் பள்ளியில் காணொளி காட்சி மூலம் அன்புச் சோலை திட்டத்தை (முதியோர் பராமரிப்பு மையத்தை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் ஐ. பெரியசாமி, திண்... மேலும் பார்க்க