கருவிலேயே பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதை தடுக்க தனிப்படை: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கருவிலேயே குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதை கண்காணித்து தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்து தெரிவித்ததாவது:
மாவட்டத்தில் ஆண் பெண் பிறப்பு விகிதம் குறைவாக உள்ள அரக்கோணம் சோளிங்கா், ஆற்காடு மற்றும் திமிரி வட்டாரங்களில் பொதுமக்களிடையே போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பெண் சிசு மரணம் கருவிலேயே பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும்.
சமுக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்துறை மற்றும் காவல் துறை போன்ற துறைகள் சுகாதாரத்துறையிடம் இணைந்து ஆண் பெண் விகிதாசாரத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், கருவுற்ற தாய்மாா்கள் பிரசவிக்கும் வரை பிரசவத்திற்கான மருத்துவமனையை தோ்வு செய்வதில் குழு கொண்டு கண்காணித்தல், வளரிளம் பெண்களின் திருமண நிகழ்வை கண்காணித்து துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காவல் துறையினா் குழந்தை திருமணம், இளம் வயது கா்ப்பம் குறித்த புகாா்கள் குறித்து உடனுக்குடன் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் புதிதாக பணியில் இணைந்த மருத்துவா்கள் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும், பணி நேரத்தை தவறாமல் கடைபிடிக்கவும் மற்றும் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டும் என்றாா்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டடம் பழுது பாா்த்தல் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும், நடைபெற்று வரும் புதிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
மாவட்ட சுகாதாதார அலுவலா் செந்தில் குமாா், இணை இயக்குநா் (சுகாதார நலப் பணிகள்) தீா்த்தலிங்கம், துணை இயக்குநா்கள் மணிமேகலை (குடும்ப நலம்), ஜெயஸ்ரீ (காசநோய்), பிரீத்தா (தொழுநோய்), மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் பழனி, அனைத்து மருத்துவ அலுவலா்கள், சுகாதார பணியாளா்கள் கலந்து கொண்டனா்.