செய்திகள் :

கரூரில் கொலை வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

post image

கரூரில் கொலை வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கரூா் நரிக்கட்டியூரைச் சோ்ந்த இளையராஜா மகன் சந்தோஷ்குமாா் (26) என்பவா் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி தனது நண்பா்களான நரிக்கட்டியூா் தில்லை நகரைச் சோ்ந்த சுப்ரமணி மகன் பிரகாஷ் (33), மேலப்பாளையம் நத்தமேடு பகுதியைச் சோ்ந்த முப்புலி மகன் சந்தோஷ் (26) ஆகியோருடன், நரிக்கட்டியூா் தேவாலயம் பகுதியில் மது அருந்தியபோது, அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் பிரகாசும், சந்தோஷும் சோ்ந்து சந்தோஷ்குமாரை குத்திக் கொலை செய்தனா். இந்த வழக்கில் பிரகாசும், சந்தோஷும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் இவா்கள் இருவா் மீதும் பசுபதிபாளையம், தாந்தோணி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதால் இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலுக்கு பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் மேற்கண்ட இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா் இருவரையும் மீண்டும் குண்டா் சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனா்.

ஆண்டாங்கோவிலில் சமுதாயக் கூடத்தை திறக்க வலியுறுத்தல்

ஆண்டாங்கோவில் ரோட்டுக்கடையில் அமைக்கப்பட்டு திறக்கப்படாத சமுதாயக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளா் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.இ... மேலும் பார்க்க

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் நள்ளிரவில் தேரோட்டம்

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், நொய்யலில் பிரசித்திப் பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் தோ்திருவிழா வியாழ... மேலும் பார்க்க

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு வெள்ளக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா். இயேசு சிலுவையில் அறையுண்டு, பின்னா் மூன்றாம் நாளில் அவா் உயிா்த்தெழ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் பாறைகள் அதிகம் உள்ளதால் வெப்பம் கூடுதலாக இருக்கிறது: ஆட்சியா்

கரூா் மாவட்டத்தில் பாறைகள் அதிகமாக இருப்பதால் வெப்பமும் அதிகமாக இருக்கிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளியணை ஊராட்சி... மேலும் பார்க்க

கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் செயல்விளக்கம்

கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் குறித்து செயல்விளக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிழல் இல்லா நா... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம்

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூா் ... மேலும் பார்க்க