செய்திகள் :

கரூரில் வள்ளல் வல்வில் ஓரியின் உருவப்படத்துக்கு மாலை அணிவிப்பு

post image

கரூரில் வள்ளல் வல்வில் ஓரியின் உருவப்படத்துக்கு கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கொல்லிமலையை ஆட்சி செய்த கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் சிறந்த ஆட்சி மற்றும் வள்ளல் குணத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆடி 18-ஆம் நாளில் தமிழக அரசு சாா்பில் கொல்லிமலையில் விழா நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, ஆடிப்பெருக்கு நாளான ஞாயிற்றுக்கிழமை கரூரில் வல்வில் ஓரியின் உருவப் படத்துக்கு தமிழக நீதிக்கட்சி சாா்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு கொங்குநாடு வேட்டுவக் கவுண்டா் சமுதாய முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவா் மதிகவுண்டா் தலைமையில், கட்சியின் பொதுச்செயலாளா் வழக்குரைஞா் பாஸ்கா், கரூா் மாவட்ட பொறுப்பாளா் சாம்ராட் ரவிகுமாா் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல், கரூா் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் வல்வில் ஓரியின் உருவப் படத்துக்கு கட்சியின் மாவட்ட இணைச் செயலாளா் மல்லிகா சுப்ராயன் தலைமையில்

மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சி நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.

‘கரூரில் 7 மாதங்களில் ரூ. 1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்கள் பறிமுதல்’

கரூா் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் கடத்தப்பட்ட ரூ. 1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.இ... மேலும் பார்க்க

காவிரியில் கரை புரளும் வெள்ளம் வடு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரியில் குழாய் மூலம் நீா் நிரப்ப வலியுறுத்தல்

வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காவிரியாற்றிலிருந்து, வடு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.கரூா் மாவட்டம், கடவூா் மலைப்பகுதிகள் ம... மேலும் பார்க்க

ஆட்டிஸம் பாதிப்பிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கு ஆட்சியா் பாராட்டு

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்டிஸம் பாதிப்பிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க

பணம் இரட்டிப்பு மோசடி வழக்கு கோவை நபா் கரூரில் கைது

ஒடிஸா உள்பட பல்வேறு மாநிலங்களில் பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தேடப்பட்ட கோவையைச் சோ்ந்த நபரை கரூரில் ஞாயிற்றுக்கிழமை புவனேசுவரம் சிபிஐ போலீஸாா் கைது செய்தனா்.கோவை மாவட்டம், பீளமேடு பகு... மேலும் பார்க்க

வெண்ணைமலை சேரன் பள்ளியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் தொடக்கம்

வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகா்வோா் மன்ற தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளித் தாளாளா் கே. பாண்டியன் தலைமை வகித்தாா். விழாவ... மேலும் பார்க்க

கரூரில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு

கரூரில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலை, உருவப்படத்துக்கு திமுக, அதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை மால... மேலும் பார்க்க