செய்திகள் :

கரூர் செல்லும் விஜய்; டிஜிபி-யிடம் அனுமதி கேட்க என்ன காரணம் - அருண்ராஜ் விளக்கம்!

post image

தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். குடும்பத்தினரின் இழப்புக்கு ஆறுதல் கூறியதுடன், விஜய் தனிப்பட்ட முறையில் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

கரூர் மருத்துவமனை
கரூர் மரணங்கள்

இந்தநிலையில் அடுத்தகட்டமாக விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ், "கரூர் வந்து மக்களைச் சந்திக்க அனுமதி கேட்டு டிஜிபியை நேற்றிரவு இமெயில் மூலம் அணுகியுள்ளனர். இன்று நேரில் வந்து கொடுக்கவுள்ளனர்.

இன்னொருமுறை இதுபோன்ற அசம்பாவிதம் நடப்பது யாருக்கும் நல்லது இல்லை. அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் சந்திக்க என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை விவாதிக்க ஒரு சந்திப்பைக் கேட்டிருக்கிறோம்.

அருண்ராஜ்
அருண்ராஜ்

தலைவர் நேற்றும் அதற்கு முந்தைய நாளும் 33 பேரிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். 'என்ன ஆறுதல் சொன்னாலும் இழப்பை ஈடு செய்ய முடியாது, நான் உங்களுடன் இருப்பேன். நான் உங்களை விரைவில் நேரில் சந்திப்பேன்' எனக் கூறியுள்ளார். கரூர் சுற்றுவட்டாரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்ந்து பேசவிருக்கிறார்.

பேசிய மக்கள் எல்லோருமே 'நீங்க தைரியமா இருங்க, தொடர்ந்து முயற்சி பண்ணுங்க' என்றே கூறினர்." எனத் தெரிவித்துள்ளார்.

`பாட்டிலுக்கு 10 ரூபாய்’ - எதிர்பார்த்தது எடப்பாடியை; வந்தது செந்தில் பாலாஜி - கோவை ட்விஸ்ட்

கோவை அவிநாசி சாலையில் 10.10 கிமீ தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை கோவை வருகை தர உள்ளார். இதற்காக கோவை திமுக பொறுப்பாளர்கள் மற்றும் ... மேலும் பார்க்க

Karur : 'அண்ணனா நினைச்சுக்கோங்க; நேர்ல வரேன்' - கரூர் குடும்பங்களிடம் வீடியோ காலில் அழுத விஜய்

'கரூர் துயரம்!'கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் தவெக தலைவர் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதை உறுதிப்படுத்திக் கொள்ள கரூர் சம்பவத்தில் உயிரிழந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடி : 11-ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்திய போலீஸ் ஏட்டு - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம். இவரது உறவினரான 16 வயதான சிறுவன் நாசரேத் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப... மேலும் பார்க்க

Seeman: "இனி அவதூறாகப் பேச மாட்டேன்" - நடிகை வழக்கில் மன்னிப்பு கேட்ட சீமான்

நடிகை குறித்து அவதூறாகப் பேசியதற்காக உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருக்கிறார்.சீமான் தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக... மேலும் பார்க்க

சபரிமலை: தங்க கவசத்தை செம்பு கவசம் எனப் பதிந்த அதிகாரி; சஸ்பெண்ட் செய்த தேவசம்போர்டு; என்ன நடந்தது?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கருவறை முன்புள்ள துவார பாலகர்கள் சிலைகளின் தங்க கவசங்கள் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த மாதம் 7-ம் தேதி சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. விலை மதிப்புமிக்க பொருட்களை கோய... மேலும் பார்க்க

Bihar Election: நிதிஷ் தக்க வைப்பாரா? தேஜஸ்வி ஆட்சியைப் பிடிப்பாரா? பரபரக்கும் பீகார் தேர்தல் களம்

முடித்த காங்கிரஸ் ஆதிக்கம்.. தொடங்கிய லாலுவின் எழுச்சி!பீகார் மாநிலத்திற்கான முதல் சட்டமன்றத் தேர்தல் 1952-ல் நடைபெற்றது. அப்போது முதல் 1990 வரை காங்கிரஸ் கட்சியே அந்த மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்த... மேலும் பார்க்க