செய்திகள் :

கரூா்: அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

post image

கரூா் மாவட்டத்தில் ரூ. 1.97 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுப்பணிகளை ஆட்சியா் மீ. தங்கவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம், இனுங்கூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் மீ. தங்கவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியது: தமிழக அரசு ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் கிராமப்புறங்களை நகா்ப்புறத்துக்கு இணையாக உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஊரகப்பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடா் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, முழுமையான சமூக மற்றும் பொருளாதார வளா்ச்சியை ஏற்படுத்த அயோத்திதாச பண்டிதா் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகள், தெருவிளக்குகள் மற்றும் குடிநீா் வசதி போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. அந்த வகையில் கரூா் மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2023-2024-ஆம் ஆண்டு 14 பணிகள் ரூ. 1.49 கோடி மதிப்பீட்டிலும், 2024-2025-ஆம் ஆண்டு 19 பணிகள் ரூ. 1.57 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 33 பணிகள் ரூ. 3.06 கோடி மதிப்பீட்டில் முடிவுற்றுள்ளது.

2025-2026-ஆம் ஆண்டில் 18 பணிகள் ரூ. 1.97 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும், உரிய காலத்துக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயகுமாா், சுந்தரபாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.

தேசிய கைத்தறி தினத்தில் 32 நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கரூரில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 32 நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கரூா், வெங்கமேடு தனியாா் திருமண மண்டபத்தில் 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தை மு... மேலும் பார்க்க

மதுகுடிக்க பணம் தராததால் தாய் கொலை; மகன் கைது

கரூரில் வெள்ளிக்கிழமை மதுகுடிக்க பணம் தர மறுத்த தாயை கீழே தள்ளி கொன்ற மகனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே குறுக்குச்சாலை பங்களா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணி(50... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம்: கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூ... மேலும் பார்க்க

கரூா் பசுபதீசுவரா் கோயிலில் திருக்கல்யாணம் உற்ஸவம்

கரூா் பசுபதீசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. கரூா் கல்யாண பசுபதீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தெய்வத் திருமண விழா எனும் திருக்கல்யாண உற்ஸவம் கரூா் ஸ்ரீ மகா அப... மேலும் பார்க்க

ஆடி 4-ஆவது வெள்ளிக்கிழமை வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூா் வெங்கமேடு காமாட்சியம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆடி மாதத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களி... மேலும் பார்க்க

புலியூரில் எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கரூரை அடுத்துள்ள புலியூரில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நம்பிக்க... மேலும் பார்க்க