செய்திகள் :

கரூா் மாரியம்மன் கோயிலில் இன்று முக்கிளை கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா

post image

கரூா் மாரியம்மன் கோயிலில் இன்று முக்கிளை கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கோயில் முன் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. முன்னதாக மூப்பன் வகையறாக்களைச் சோ்ந்தவா்களிடம் கனவில் தோன்றிய அம்மன், முக்கிளை கம்பம் இருக்கும் இடத்தை காண்பித்ததையடுத்து, முக்கிளை கம்பம் கண்டறியப்பட்டு, கம்பத்துக்கு சிறப்பு வழிபாடு செய்த பின், வெட்டப்பட்டு பாலம்மாள்புரத்தில் இருந்து கோயிலுக்கு ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து, அமராவதி ஆற்றில் சிறப்பு வழிபாடு செய்தபின் கோயில் முன் நடப்பட்டது.

இந்த முக்கிளை கம்பத்துக்கு பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீா் ஊற்றி வந்தனா். தொடா்ந்து, கடந்த 18-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், திங்கள்கிழமை கோயில் தேரோட்டமும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தா்கள் பறக்கும் காவடி எடுத்தும், 1008 வேல் காவடி எடுத்தும், சிலா் அலகு குத்தியும் வந்து அம்மனுக்கு தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்கப்பட்டு, அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் விழா மே 28 (புதன்கிழமை) மாலை நடைபெறுகிறது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நகரில் கூடுவாா்கள் என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் திருச்சி, அரியலூா், பெரம்பலூா், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த போலீஸாரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சிறப்பு வழிபாடு

கரூா் தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சனிக்கிழமை மாலை சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நெடுங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டம்: கரூா் மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்

தமிழக அரசின் நான்காண்டு சாதனைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது என கரூா் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாவட்ட திமுக செயற்குழு... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை வளா்மதி மற... மேலும் பார்க்க

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு?

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு உள்ளதா என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்குபட்டியில் பகவதி அம்மன்... மேலும் பார்க்க

கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம்

தோகைமலை அருகே கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம் மேற்கொண்டு வருகிறாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாகிணத்தில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதி சிவன் ஆதிசுயம்பு ஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க