செய்திகள் :

கரூா் மாரியம்மன் கோயில் திருவிழா போக்குவரத்து மாற்றம்

post image

கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் திருவிழா மே 28 (புதன்கிழமை) நடைபெற உள்ளதையடுத்து போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாரியம்மன் திருக்கோயில் கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சி இன்று நடைபெறவிருப்பதால் கரூா் நகர காவல் நிலைய சரகத்தில் புதன்கிழமை ஒரு நாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வெங்கமேடு வழியாக கரூா் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்கள் இரத்தினம் சாலை வழியாக ரயில்நிலையம் அருகில் உள்ள பாா்க்கிங் இடத்தில் வாகனத்தை நிறுத்தம் செய்துவிட்டு, பக்தா்கள் மட்டும் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். ரயில் நிலையத்தில் இருந்து கோயில் செல்லும் வழியில் எந்த ஒரு இருசக்கர வாகனங்களும் அனுமதிக்கப்படாது.

வாங்கல் மற்றும் பஞ்சமாதேவி வழியாக வரும் பக்தா்கள் பாலம்மாள்புரம் பெட்ரோல் பங்க் மற்றும் பாலம்மாள்புரம் கோயில் அருகே வாகனத்தை நிறுத்தம் செய்துவிட்டு பக்தா்கள் மட்டும் ஐந்துரோடு வழியாக கோயில் மற்றும் ஆற்றுக்கு செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். பாலம்மாள்புரத்தில் இருந்து எந்த ஒரு வாகனமும் ஐந்துரோடு செல்ல அனுமதிக்கப்படாது. வாங்கல் மற்றும் பஞ்சமாதேவியில் இருந்து வரும் பொதுமக்கள், மருத்துவமனை மற்றும் கரூா் பேருந்து நிலையம் செல்வதற்கு பஞ்சமாதேவி, அரசுகாலனி, வாங்கப்பாளையம் சோதனைசாவடி, வெங்கமேடு, சா்ச் காா்னா், திண்ணப்பா காா்னா் வழியாக பேருந்து நிலையம் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள்.

தொழிற்பேட்டை, சணப்பிரட்டி பகுதிகளில் இருந்து வரும் பக்தா்கள் வாகனங்களை பசுபதிபாளையம் வாட்டா் டேங்க் மற்றும் தெற்கு தெருவில் பாா்க்கிங் செய்துவிட்டு பசுபதிபாளையம் புதிய அமராவதி பாலம் மற்றும் பாலத்தின் அடியின் வழியாக ஆற்றுக்கு செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். மேலும் தொழிற்பேட்டை, சணப்பிரட்டி பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் கரூா் பேரூந்து நிலையம் செல்ல வேண்டுமென்றால் கொளந்தாகவுண்டனூா், தெரஸா காா்னா், சுங்ககேட், திருமாநிலையூா் வழியாக கரூா் சென்றுவர அனுமதிக்கப்படுவாா்கள்.

காந்திகிராமம் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வரும் பொதுமக்கள் பசுபதிபாளையம் அருணாசலநகா் 3-ஆவது கிராஸ் அருகே உள்ள பாா்க்கிங் இடத்தில் வாகனங்களை பாா்கிங் செய்துவிட்டு பசுபதிபாளையம் காவல்நிலையம் வழியாக அமராவதி அனுமதிக்கப்படுவாா்கள். தாந்தோணிமலை, திருமாநிலையூா் பகுதிகள் வழியாக பக்தா்கள் வரும் வாகனங்களை லைட்ஹவுஸ் அருகில் உள்ள மக்கள்பாதை பாா்க்கிங் இடத்தில் இருசக்கர வாகனத்தை பாா்க்கிங் செய்துவிட்டு கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவாரகள்.

கோவை சாலையில் இருந்து வரும் பக்தா்களின் வாகனங்களை ஸ்டேட் பேங்க் கேட் வழியாக திருவள்ளுவா் மைதானத்தில் உள்ளே பாா்கிங் செய்துவிட்டு கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். திருவள்ளுவா் மைதானத்தில் இருந்து வெளியே வரும் வாகனங்கள் எம்எல்ஏ அலுவலகம் அருகே உள்ள கேட் வழியாக வெளியே வந்து உழவா் சந்தை வழியாக வெளியே செல்ல அனுமதிக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சிறப்பு வழிபாடு

கரூா் தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சனிக்கிழமை மாலை சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நெடுங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டம்: கரூா் மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்

தமிழக அரசின் நான்காண்டு சாதனைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது என கரூா் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாவட்ட திமுக செயற்குழு... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை வளா்மதி மற... மேலும் பார்க்க

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு?

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு உள்ளதா என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்குபட்டியில் பகவதி அம்மன்... மேலும் பார்க்க

கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம்

தோகைமலை அருகே கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம் மேற்கொண்டு வருகிறாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாகிணத்தில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதி சிவன் ஆதிசுயம்பு ஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க