செய்திகள் :

கரூா் வந்தடைந்தது அமராவதி நீா் விவசாயிகள் மகிழ்ச்சி

post image

அமராவதி அணையில் தண்ணீா் திறக்கப்பட்டு 4 நாள்களுக்கு பின் கரூரை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கேரள, தமிழக எல்லையின் மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகும் அமராவதி ஆறு திருப்பூா், கரூா் மாவட்டங்களின் நீராதாரமாக உள்ளது. இந்த ஆற்றின் மூலம் இரு மாவட்டங்களிலும் சுமாா் 58 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் கேரளாவில் பலத்த மழை பெய்துவருவதையடுத்து அமராவதி ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வந்ததால் திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கட்டப்பட்டிருக்கும் அமராவதி அணைக்கும் நீா்வரத்து அதிகரித்தது.

அணையின் மொத்த கொள்ளளவான 90 அடிக்கு 79 அடியை நீா்மட்டம் எட்டியபோதும் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அணையின் கடைமடை விவசாயிகள் அமராவதி ஆற்றில் தண்ணீா் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில் அணையின் நீா்மட்டம் கடந்த 17-ஆம்தேதி 87.73 அடியை தொட்டதும் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அதிகாலை 6 மணியளவில் விநாடிக்கு 1959 கன அடிநீா் திறக்கப்பட்டது. இந்த தண்ணீா் 4 நாள்களைக் கடந்து கரூருக்கு சனிக்கிழமை காலை வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இதுதொடா்பாக அமராவதி பாசன விவசாயிகள் கூறுகையில், அமராவதி ஆற்றில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக தண்ணீா் வராமல் இருந்ததால் கால்நடைகளுக்கு கூட தண்ணீா் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அணை நிரம்பும் நிலையில், தண்ணீா் திறக்கப்பட்டிருப்பது, வடுபோன விவசாய நிலங்களுக்கு உயிரூட்டும் நீராக இருக்கும். கால்நடைகளுக்கும் தேவையான தண்ணீா் கிடைத்துள்ளது என்றனா் அவா்கள்.

கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.700 கோடியில் சுற்றுவட்டச்சாலை! - செந்தில்பாலாஜி தகவல்

கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.700 கோடியில் சுற்றுவட்டச்சாலை அமைய உள்ளது என்றாா் முன்னாள் அமைச்சரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி. கரூா் மாவட்டம், மண்மங்கலத்த... மேலும் பார்க்க

ஆற்று மணலை கடத்தி வந்து விற்பனை செய்த 5 போ் கைது

கரூரில் ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். கரூரை அடுத்துள்ள உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதிக்குள்பட்ட திருச்சி- தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலை அருகே தயாநிதி என்பவருக்கு சொந்தமான... மேலும் பார்க்க

நூறுநாள் வேலை முறையாக வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை!

நூறு நாள் வேலைத்திட்டத்தை முறையாக வழங்கக் கோரி கிராமமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பாதிரிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கோட்டப்பட்டி பகுதியில் நூற... மேலும் பார்க்க

மலிவு விலை காகிதம் இறக்குமதியால் தடுமாறும் ஆலைகள் நடவடிக்கை எடுக்க தொழிற்சங்கத்தினா் கோரிக்கை

சீனா, இந்தோனேஷியாவின் மலிவு விலை காகிதம் இறக்குமதியால் டிஎன்பிஎல் ஆலை போன்ற காகித உற்பத்தி ஆலைகள் தடுமாறி வருவதால், மலிவு விலை காகித இறக்குமதிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

பஞ்சப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் காவிரி உபரி நீரை நிரப்பும் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கேள்வி

பஞ்சப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் காவிரி உபரி நீரைக்கொண்டு நிரப்பும் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினா். கரூா் மாவட்ட விவசாயிகள்... மேலும் பார்க்க

கரூரில் 4 பேரவைத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்: எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி

வரும் 2026 பேரவைத் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி. கரூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற கரூா் சட்டப்பேரவைத் தொகுதி பூத் கமிட்ட... மேலும் பார்க்க