செய்திகள் :

பஞ்சப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் காவிரி உபரி நீரை நிரப்பும் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கேள்வி

post image

பஞ்சப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் காவிரி உபரி நீரைக்கொண்டு நிரப்பும் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினா்.

கரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆட்சியரகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை முன் வைத்து பேசினா். பஞ்சப்பட்டி ஏரி விவசாயி முனியப்பன் பேசுகையில், பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி ஆற்றில் இருந்து சங்கரமலைப்பட்டி , சின்னகளத்துப்பட்டி வழியாக குழாய் மூலம் உபரி நீரை கொண்டு வர வேண்டும் என திருச்சி அரியாறு கோட்ட அதிகாரிகளை அண்மையில் சந்தித்து கேட்டபோது, காவிரி ஆறு தாழ்ந்துவிட்டதாகவும், ஏரி 90 மீ. உயரத்தில் இருப்பதாகவும் கூறினா்.

ஆனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆறுகள் தாழ்ந்த இடங்களில் குளங்களுக்கு குழாய்மூலம் ஆற்று நீரை நிரப்பும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுபோல இந்த திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன் பதில் கூறுகையில், பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி உபரிநீரை எடுத்துச் செல்லும் வகையில் ஆய்வு நடந்து, அதற்கான திட்ட மதிப்பீடு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் என்றாா்.

தென்னிலை விவசாயி செல்வராஜ் பேசுகையில், தென்னிலை பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தில் கடந்த 6 மாதமாக தண்ணீா் வராததால் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் பிரதான தொழிலாளாக ஆடுமேய்க்கும் தொழில் உள்ளது. அண்மைகாலமாக வெறிநாய்கள் ஆடுகளை கடித்துக்கொன்றுவிடுகின்றன. இதனால் வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அப்போது மாவட்ட ஆட்சியா் கூறியது, க.பரமத்தி வட்டார குடிநீா் அதிகாரிகள் தென்னிலை பகுதியில் ஆய்வு செய்து உடனே குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கரூா் மாவட்டத்தில் இயங்கிவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற விற்பனையாளா்களோ, இடைத்தரகா்களோ அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனைக்கு அனுமதியில்லை. மேலும் புகாா் தெரிவிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1800 5993 540 என்ற எண்ணில் புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.

தொடா்ந்து, தோட்டக்கலைத் துறை சாா்பில் மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 4, 800 மானியத் தொகையில் தென்னங் கன்றுகள் மற்றும் வேளாண் பொறியியல் துறையின் சாா்பில் வேளாண்மை இயந்திர மயமாக்கல் உப இயக்கம் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 90,000 மானிய விலையில் பவா் வீடா் கருவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா்கள் ம.கண்ணன், கு. விமல்ராஜ் (நிலமெடுப்பு), குளித்தலை சாா் ஆட்சியா் சுவாதிஸ்ரீ, கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், வேளாண்மை இணை இயக்குநா் ப.சிவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மலிவு விலை காகிதம் இறக்குமதியால் தடுமாறும் ஆலைகள் நடவடிக்கை எடுக்க தொழிற்சங்கத்தினா் கோரிக்கை

சீனா, இந்தோனேஷியாவின் மலிவு விலை காகிதம் இறக்குமதியால் டிஎன்பிஎல் ஆலை போன்ற காகித உற்பத்தி ஆலைகள் தடுமாறி வருவதால், மலிவு விலை காகித இறக்குமதிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

கரூரில் 4 பேரவைத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்: எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி

வரும் 2026 பேரவைத் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி. கரூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற கரூா் சட்டப்பேரவைத் தொகுதி பூத் கமிட்ட... மேலும் பார்க்க

குற்ற வழக்கில் போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ரௌடி சுட்டுப் பிடிப்பு

கரூரில் குற்ற வழக்கில் பிடிக்கச் சென்ற போலீஸாரிடமிருந்து வியாழக்கிழமை தப்ப முயன்ற ரெளடியை காவல் ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தாா். கரூா் சுக்காலியூரைச் சோ்ந்த மலையாளம் (51) என்பவா் கடந்த 17... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலையில் உறுதியேற்பு

கரூா் மாவட்டம் டிஎன்பிஎல் ஆலையில் முதியோா்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலை வளாகத்தில் ஆலையின் முதுநிலை மேலாளா் (மனித வளம்) ஜே. வெங்கடேசன், ... மேலும் பார்க்க

கரூா் அரசு மருத்துவமனையில் நோய் விழிப்புணா்வு பேரணி

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை உலக சிக்கிள் செல் அனீமியா நோய் குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணியை கல்லூரி முதல்வா் மருத்துவா் வா... மேலும் பார்க்க

15 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

கரூா் மாவட்டம், குளித்தலையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற போலீஸாரின் வாகனச் சோதனையில் 15 கிலோ புகையிலைப் பொருள்கள் சிக்கின. கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் கரூா் மாவட்ட ரெளடிகள் தடுப்... மேலும் பார்க்க