டிஎன்பிஎல் ஆலையில் உறுதியேற்பு
கரூா் மாவட்டம் டிஎன்பிஎல் ஆலையில் முதியோா்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலை வளாகத்தில் ஆலையின் முதுநிலை மேலாளா் (மனித வளம்) ஜே. வெங்கடேசன், துணை மேலாளா்கள் (மனித வளம்) எஸ். சதீஷ், ஆா்.தேவநாதன் ஆகியோா் தலைமையில் உறுதிமொழியை வாசிக்க, அவற்றை பணியாளா்கள், ஆலை அலுவலா்கள் ஏற்றுக்கொண்டனா்.