ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்
குற்ற வழக்கில் போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ரௌடி சுட்டுப் பிடிப்பு
கரூரில் குற்ற வழக்கில் பிடிக்கச் சென்ற போலீஸாரிடமிருந்து வியாழக்கிழமை தப்ப முயன்ற ரெளடியை காவல் ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தாா்.
கரூா் சுக்காலியூரைச் சோ்ந்த மலையாளம் (51) என்பவா் கடந்த 17-ஆம் தேதி இரவு கரூா் லைட்ஹவுஸ்காா்னா் பகுதியில் நின்றபோது அங்கு மதுபோதையில் வந்த ரெளடிகளான கரூா் சின்னாண்டாங்கோயில் வீதி பென்சில் என்கிற தமிழழகன்(30), வஞ்சியம்மன் கோயில் தெரு பிரகாஷ் (25), ஹரிஹரன் (30), படிக்கட்டுத் துறை மனோஜ் (25) ஆகியோா் அவரிடம் தகராறு செய்து கட்டையால் தாக்கினா். இதில் மலையாளம் படுகாயமடைந்தாா்.
இதுதொடா்பான புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகியோரை புதன்கிழமை கைது செய்து, தலைமறைவான பென்சில் என்கிற தமிழழகனைத் தேடி வந்தனா்.
இதனிடையே தமிழழகன் புதன்கிழமை நள்ளிரவு கரூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அரிக்காரம்பாளையம் ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கரூா் நகர காவல் ஆய்வாளா் மணிவண்ணன் தலைமையிலான போலீஸாா் சென்று தமிழழகனை பிடிக்க முயன்றபோது அவா், கத்தியை காட்டி மிரட்டியதுடன், ஆய்வாளரை கத்தியால் குத்தவும் முற்பட்டாா். அப்போது ஆய்வாளா் மணிவண்ணன் துப்பாக்கியை காட்டி மிரட்டியும், தமிழழகன் சரணடையாமல் ஓட முயன்ால் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டாா்.
இதில் மயங்கிய தமிழழகனை போலீஸாா் மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இவா் மீது 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் கரூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலுவையில் உள்ளன.