'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
லாலாபேட்டை அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி
கரூா் மாவட்டம் லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.45 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா். விழாவில் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி, பெரம்பலூா் எம்பி அருண்நேரு ஆகியோா் கட்டுமானப் பணிகளைத் தொடக்கிவைத்தனா். விழாவில் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி பேசுகையில், குளித்தலை அரசு மருத்துவமனை ரூ. 40 கோடியில் அரசு தலைமை மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்பட்டு பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. மேலும் கூடுதலாக ரூ. 10 கோடி நிதி வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் குளித்தலை குடிநீா் திட்டப்பணியும் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றாா் அவா்.
குளித்தலை எம்எல்ஏ இரா. மாணிக்கம் முன்னிலை வகித்தாா். குளித்தலை சாா் -ஆட்சியா் தி. சுவாதிஸ்ரீ, குளித்தலை நகா்மன்றத் தலைவா் சகுந்தலா பல்லவி ராஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் (பொ) செல்வமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.