கரூா் அரசு மருத்துவமனையில் நோய் விழிப்புணா்வு பேரணி
கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை உலக சிக்கிள் செல் அனீமியா நோய் குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணியை கல்லூரி முதல்வா் மருத்துவா் வா. லோகநாயகி தொடங்கிவைத்துப் பேசியது:
ஜூன் 19-ஆம் தேதி உலக சிக்கிள்செல் அனீமியா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நோய் பழங்குடியினரை அதிகம் தாக்கும் நோய். இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களின் ரத்த சிவப்பணுக்கள் வட்டவடிவமாக இல்லாமல் பிறை வடிவமாக இருக்கும். இதனால் ரத்தத்தில் சிகப்பணுக்களின் எண்ணிக்கையும் குறைந்து, ரத்தக்குழாய்களில் அடைப்பு, நுரையீரல், சிறுநீரகம், மூளை உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளில் பாதிப்பும் ஏற்படும். மரபணு சிகிச்சை, ரத்தம் செலுத்துதல், எலும்பு மஜ்ஜை மாற்றுதல் போன்ற சிகிச்சைகள் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்த இயலும் என்றாா் அவா்.
முன்னதாக பேரணி முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தது. இதில் மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பேராசிரியா் மருத்துவா் பெ. ராஜா, குழந்தைகள் நல இணைப் பேராசிரியா்கள் காஞ்சனா, வித்யாதேவி மற்றும் மருத்துவா்கள், பயிற்சி மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.