செய்திகள் :

கலைமாமணி விருது பெறும் சதிராட்டக் கலைஞர் முத்துகண்ணம்மாள்!

post image

விராலிமலை: விராலிமலை சேர்ந்த சதிர் கலைஞரான பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள் தமிழக அரசின் கலைமாமணி (பால சரசுவதி) விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விராலிமலையைச் சேர்ந்த 93 வயதான முத்து கண்ணம்மாள் இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். தனது சிறுவயது முதலே சதிராட்டத்தில் தேர்ச்சி பெற்றவர். முன் காலத்தில் விராலிமலை முருகன் மலைக்கோயில் சுவாமி கிரிவலத்தின் போது இவரது சதிராட்டம் முன்னே செல்லும், அதனைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் சதிராட்டத்தின் பின்னால் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இன்றும் அந்த பகுதி பெண்பிள்ளைகளுக்கு சதிராட்டம் கற்றுத்தரும் இவரிடம் தற்போது பிரபலமாக உள்ள பல நாட்டியக் கலைஞர்கள் சதிராட்டம் குறித்து பல சந்தேகங்களை கேட்டு அறிந்தார்கள் ஆவார்கள்.

சதிராட்ட கலைஞரான இவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்து புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 2021, 2022 மற்றும் 23 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், விராலிமலை சேர்ந்த சதிர் கலைஞரான பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள் தமிழக அரசின் கலைமாமணி (பால சரசுவதி) விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: முழு விவரம்!

Muthukannammal, the satirical artist who will receive the Kalaimamani Award!

ஜெயிலர் இரண்டாம் பாகம் ஜூன் 12 இல் வெளியாகும்: நடிகர் ரஜினிகாந்த் தகல்

ஜெயிலர் இரண்டாம் பாகம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகும் என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 2023-இல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர். இந்த படத்தை... மேலும் பார்க்க

மன்னா் சரபோஜி பிறந்த நாள் விழா: அரசு சார்பில் ஆட்சியர் மரியாதை

மன்னர் சரபோஜியின் 248 ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தஞ்சாவூரை சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் என பல மன்னர்கள்... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸுக்கு மக்கள் மீது கவலை இருந்திருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? : கே.என். நேரு

திருநெல்வேலி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மக்கள் மீதான கவலை இருந்திருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என அமைச்சர் கே.என். நேரு கேள்வி எழுப்பியுள்ளார். திருநெல்வேலியில் பசுமைத் தமிழ்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை வினாடிக்கு 10,849 கனஅடியில் இருந்து வினாடிக்கு 9, 425 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வி... மேலும் பார்க்க

2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: முழுவிவரம்!

2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வ... மேலும் பார்க்க

ரஷிய -உக்ரைன் போர் தொடர இந்தியாவும் சீனாவும்தான் காரணம்: அதிரபர் டிரம்ப்

நியூயார்க்: ரஷியா-உக்ரைன் போர் தொடருவதற்கு இந்தியாவும் சீனாவும்தான் காரணம் என தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷியாவின் கச்சா எண்ணெயை இந்த இரு நாடுகளும் அதிகயளவில் வாங்குவதன் மூலம் ரஷியா... மேலும் பார்க்க