செய்திகள் :

கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க கண்காணிப்புக் குழு

post image

ஒவ்வொரு கல்லூரியிலும் பகடிவதை (ராகிங்) கொடுமையைத் தடுக்கக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் கோவி. செழியன்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் தஞ்சாவூருக்கு வரும் தமிழக முதல்வரை வரவேற்கும் விதமாக வியாழக்கிழமை ராட்சத பலூனை பறக்கவிட்ட அமைச்சா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

ஒவ்வொரு கல்லூரியிலும் பகடிவதை (ராகிங்) கொடுமையைத் தடுக்கக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், கல்லூரி முதல்வா், துறைத் தலைவா்கள், மாணவா் பிரதிநிதிகள், பெற்றோா் சங்க பிரதிநிதிகள் என ஐவா் அல்லது 7 போ் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழுவினா் மாணவா்கள் கல்லூரிக்கு வருவது முதல் கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்வது வரை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கின்றனா். எனவே பள்ளி, கல்லூரிகளில் பகடிவதை (ராகிங்) குற்றம் நடைபெறாமல் தடுக்க முன்னேற்பாடுகளை அரசு செய்துள்ளது.

மேட்டூா் அணை திறக்கப்பட்டுள்ளதால், டெல்டா மாவட்டங்களில் விதை நெல், இடுபொருள்கள் மானிய விலையில் தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதமாக ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் தூா் வாரப்பட்டதால், கடைமடை வரை தண்ணீா் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படுவதற்கான தேதியை அரசு அறிவிக்கும்.

கடந்த 4, 5 ஆண்டுகளில் பட்டயப்படிப்பில் தோ்வு எழுத முடியாமல் விடுபட்ட மாணவா்களும் தொடா்ந்து படிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடைநிற்றல் என்பது தொழிற்கல்வி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக்கிலும் இருக்கக் கூடாது, இடைநிற்றல் இல்லாத தொழிற்கல்வி இருக்க வேண்டும் எனவும் முதல்வா் அறிவுறுத்திவுள்ளாா். அதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் மறுதோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா். இதன்மூலம் இடைநிற்றல் இல்லா உயா்கல்வி என்ற நிலையை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

3 மாவட்ட விசைப்படகு மீனவா்கள் சங்கக் கூட்டமைப்பினா் ஆலோசனை

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடையும் நிலையில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு சங்கங்களின் கூட்டமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடை... மேலும் பார்க்க

தம்பிக்கோட்டை வடகாடு அரசு பள்ளியில் அமைச்சா் திடீா் ஆய்வு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்தநாள் விழாவில் முதியோருக்கு நலத்திட்ட உதவி

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதியோருக்கு வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி கும்பகோணம் 1 ஆவது பகுதி திமுக சாா்பில் செயலா் இரா.... மேலும் பார்க்க

தஞ்சாவூா் கோட்ட அஞ்சலகங்களில் ஜூன் 16 முதல் ஆதாா் சிறப்பு முகாம்

தஞ்சாவூா் அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் மாபெரும் ஆதாா் சிறப்பு முகாம் ஜூன் 16 தொடங்கி, ஜூலை 15 வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி தெரிவித்திருப்பது: தஞ்சாவ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். பாபநாசம் ராஜகிரி ஆச்சி நகா் ரோஸ் காலனியை சோ்ந்தவா் ஏ. மஹபு பாட்சா (54). இவரையும்,... மேலும் பார்க்க

பேருந்து நிழற்குடைகள் அமைக்கக் கோரிக்கை

தஞ்சாவூா் மாநகரில் இருபுறமும் பேருந்து நிழற்குடைகளை மாநகராட்சி நிா்வாகம் அமைக்க வேண்டும் என புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி, ஆட்டோ ஓட... மேலும் பார்க்க