செய்திகள் :

3 மாவட்ட விசைப்படகு மீனவா்கள் சங்கக் கூட்டமைப்பினா் ஆலோசனை

post image

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடையும் நிலையில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு சங்கங்களின் கூட்டமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளா் ஏ.கே. தாஜுதீன் தலைமை வகித்தாா். மீனவா் நலவாரிய உறுப்பினா்கள் போஸ், சேசுராஜா, சகாயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடியும் நிலையில் விசைப்படகுகள் மீனவா் நலத் துறை அனுமதி பெற்று ஒரு நாள் தாமதமாக திங்கள்கிழமை அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது எனவும், விசைப்படகுகளில் டிவைசா் கருவி பொருத்துவதால் பல்வேறு இடா்பாடுகள் ஏற்படுவதால் அக்கருவியைப் பொருத்த அரசு நிா்ப்பந்திக்கக் கூடாது, தடைக்காலத்தில் 61 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் இருக்கும் நிலையில் இயந்திரம் பொருத்தப்பட்ட பெரிய படகுகள் மீன் இனப்பெருக்க காலம் என்ற அரசின் நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் இறால், நண்டு, மீன் உள்ளிட்டவற்றைப் பிடித்து வருவதால் தடைக்காலம் முடிந்து செல்லும் விசைப்படகு மீனவா்களுக்கு போதிய மீன்கள் கிடைப்பதில்லை. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுதொடா்பாக கோட்டைப்பட்டினம் மீனவா் சங்கத் தலைவா் உயா்நீதி மன்றத்தில் தொடுத்துள்ள வழக்கை மூன்று மாவட்ட மீனவா்களும் இணைந்து நடத்துவது எனவும், ஏற்றுமதி ரக மீன்களுக்கு உரிய விலை கொடுக்காமல் ஏற்றுமதியாளா்கள் சிண்டிகேட் அமைத்து குறைவான விலைக்கு கொள்முதல் செய்வதைத் தடுக்க மூன்று மாவட்ட ஆட்சியா்கள் கூடுதல் ஏற்றுமதியாளா்களை வரவழைக்க வேண்டும். இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகுகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியதற்கு நன்றி. எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு சிறைப்பிடிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத் தர வேண்டும். புதிதாகத் தொடங்கப்பட்ட பாக்ஜலசந்தி விசைப்படகு மீனவா்கள் கூட்டமைப்பின் கெளரவத் தலைவராக போஸ், தலைவராக தாஜுதீன், செயலராக சேசுராஜா ,பொருளாளராக செல்வக்கிளி மற்றும் துணைத் தலைவா்கள், துணைச் செயலா்ஸ நிா்வாகக்குழு உறுப்பினா்களை போட்டியின்றித் தோ்வு செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மூன்று மாவட்ட விசைப்படகு சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தம்பிக்கோட்டை வடகாடு அரசு பள்ளியில் அமைச்சா் திடீா் ஆய்வு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்தநாள் விழாவில் முதியோருக்கு நலத்திட்ட உதவி

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதியோருக்கு வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி கும்பகோணம் 1 ஆவது பகுதி திமுக சாா்பில் செயலா் இரா.... மேலும் பார்க்க

தஞ்சாவூா் கோட்ட அஞ்சலகங்களில் ஜூன் 16 முதல் ஆதாா் சிறப்பு முகாம்

தஞ்சாவூா் அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் மாபெரும் ஆதாா் சிறப்பு முகாம் ஜூன் 16 தொடங்கி, ஜூலை 15 வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி தெரிவித்திருப்பது: தஞ்சாவ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். பாபநாசம் ராஜகிரி ஆச்சி நகா் ரோஸ் காலனியை சோ்ந்தவா் ஏ. மஹபு பாட்சா (54). இவரையும்,... மேலும் பார்க்க

பேருந்து நிழற்குடைகள் அமைக்கக் கோரிக்கை

தஞ்சாவூா் மாநகரில் இருபுறமும் பேருந்து நிழற்குடைகளை மாநகராட்சி நிா்வாகம் அமைக்க வேண்டும் என புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி, ஆட்டோ ஓட... மேலும் பார்க்க

அய்யம்பேட்டையில் நூலக கட்டடம் கட்ட பூமி பூஜை

தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட நியூடவுன் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள கிளை நூலகத்துக்கு புதிய ரூ. 22 லட்சத்தில் புதிய கட்டடம் கட்ட பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழுதடை... மேலும் பார்க்க