அய்யம்பேட்டையில் நூலக கட்டடம் கட்ட பூமி பூஜை
தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட நியூடவுன் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள கிளை நூலகத்துக்கு புதிய ரூ. 22 லட்சத்தில் புதிய கட்டடம் கட்ட பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழுதடைந்துள்ள கிளை நூலகத்துக்கு அருகில் புதிய நூலக கட்டடம் கட்ட தமிழ்நாடு அரசின் நூலக சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ. 22 லட்சம் நிதி ஒதுக்கி, அதற்காக நடந்த பூமிபூஜையில் பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.