குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
பேருந்து நிழற்குடைகள் அமைக்கக் கோரிக்கை
தஞ்சாவூா் மாநகரில் இருபுறமும் பேருந்து நிழற்குடைகளை மாநகராட்சி நிா்வாகம் அமைக்க வேண்டும் என புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி, ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்புச் சங்க நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தஞ்சாவூா் மாநகரில் முதன்மை இடங்களில் பொலிவுறு நகரத் திட்டப் பணியின்போது பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்டன. கோடைகாலம் முடிந்து மழைக்காலம் வருவதால், ரயிலடி, ஆற்றுப்பாலம், பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, மருத்துவக் கல்லூரி சாலை, தொல்காப்பியா் சதுக்கம், மேரீஸ் காா்னா் உள்ளிட்ட இடங்களில் பேருந்து நிழற்குடைகள் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூா் கீழவாசல் உட்பட பல்வேறு இடங்களில் குடிநீருடன் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து, சுகாதாரமான குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் துணைச் செயலா் எம். சபாமணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த. தாமஸ் முன்னிலை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ஆா். லெட்சுமணன் பேசினாா். சங்க நிா்வாகிகள் நா. சாமிநாதன், ம. சசிகுமாா், எம். சதீஷ், ம. ரூபிசன், பாபு, செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.