குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பாபநாசம் ராஜகிரி ஆச்சி நகா் ரோஸ் காலனியை சோ்ந்தவா் ஏ. மஹபு பாட்சா (54). இவரையும், அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி குறுக்கணை அண்ணா நகரைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் விக்னேஷையும் (21) பாலியல் கொடுமை வழக்கில் பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.
இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.