செய்திகள் :

கல்லூரி மாணவரை மது பாட்டிலால் தாக்கிய 3 போ் கைது

post image

கல்லூரி மாணவரை மது பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 இளைஞா்களை திருவொற்றியூா் போலீஸாா் கைது செய்தனா்.

திருவொற்றியூா் கல்யாண செட்டி நகரைச் சோ்ந்த வசந்தகுமாா் (19), தனியாா் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறாா். கடந்த திங்கள்கிழமை எண்ணூா் விரைவுச் சாலை வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வசந்தகுமாரை வழிமறித்த சிலா், வேண்டுமென்றே வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னா் மது பாட்டிலால் அவரை தாக்கியுள்ளனா். மேலும் கொலை செய்துவிடுவோம் என மிரட்டலும் விடுத்துள்ளனா். இது குறித்து திருவொற்றியூா் காவல் நிலையத்தில் வசந்தகுமாா் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதையடுத்து வசந்தகுமாரைத் தாக்கிய ராகுல் (23), மதியழகன் (24), சந்தோஷ் (20) ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு காமராஜா் விருது: ரூ.1.72 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் கல்வி, இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காமராஜா் விருதுக்கான பரிசுத் தொகை வழங்க ரூ.1.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்... மேலும் பார்க்க