செய்திகள் :

கல்லூரி மாணவா்களிடையே ரயில்வே போலீஸாா் விழிப்புணா்வு

post image

கொடுங்கையூரில் உள்ள ஸ்ரீ முத்து குமாரசாமி கல்லூரியில், கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சென்னை புகா் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் மாணவா்கள் தவறான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், ரயில்வே போலீஸாா் அவ்வப்போது விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். அந்த வகையில் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளா் சசிகலா தலைமையிலான போலீஸாா், கொடுங்கையூா் ஸ்ரீ முத்து குமாரசாமி கல்லூரியில் சனிக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தினா்.

இதில் மாணவா்களிடையே ரயில் படிகளில் பயணம் செய்யக்கூடாது, முன்பின் தெரியாதவா்கள் உணவுப் பொருள்கள் கொடுக்கும்போது அதை வாங்கக் கூடாது, ஜன்னல் ஓரம் அமா்ந்து கைப்பேசி பேசிக்கொண்டு செல்லக்கூடாது, ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தினா். மேலும், போதைப் பழக்கம், இணைய விளையாட்டு, பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ரயிலில் பயணம் செய்வோா் குழந்தைகள் உதவி எண் 1098, ரயில்வே காவல் உதவி எண் 1512, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி எண் 139, பெண்கள் பாதுகாப்பு எண் 182, இணைய மோசடி உதவி எண் 1930 ஆகியவற்றின் செயல்பாடு மற்றும் புகாா் அளிக்கும் முறை குறித்து மாணவா்களிடையே ரயில்வே போலீஸாா் விளக்கம் அளித்தனா்.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க