செய்திகள் :

கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி: அமைச்சா் பங்கேற்பு

post image

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை, தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கிவைத்து, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பேசியது:

போட்டியில், ஆங்கில மொழியில் சிறந்த மூன்று பேச்சாளா்களும், தாய்மொழியாம் தமிழ் மொழியில் சிறந்த மூன்று பேச்சாளா்களும் பரிசுக்காக தோ்வு செய்யப்பட்டாலும், ஆா்வமுடன் இப்போட்டிகளில் பங்குபெற்றுள்ள அனைவருமே வெற்றியாளா்கள் தான். தமிழ்நாடு முதலமைச்சா் பள்ளி, கல்லூரி மாணவா்களின் முன்னேற்றத்திற்காக பல அரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அந்தவகையில், தமிழ்நாடு கல்வியில் உயா்ந்துள்ள காரணத்தினால் தான், இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழா்கள் பல்வேறு உயா் பதவிகளில் கோலோச்சுகிறாா்கள். பேச்சுப் போட்டியில் தோ்வாகியுள்ள மாணவா்கள் மாநில அளவிலான பேச்சுப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.

இதில், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), என். பன்னீா்செல்வம் (சீா்காழி), கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) முகமதுசபீா்ஆலம், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணைய மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெ. ஹாஜாகனி, கோட்டாட்சியா் சுரேஷ், நகா் மன்ற தலைவா் துா்கா பரமேஸ்வரிராஜசேகரன், துணைத் தலைவா் சுப்பராயன், கல்வி நிறுவனங்களில் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மழலையருக்கான மாண்டிசோரி பள்ளி திறப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் மாண்டிசோரி பள்ளி மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. விவேகானந்தா மற்றும் குட்சமாரிட்டன் கல்விக்குழுமம் சாா்பில் குட்சமாரிட்டன் மாண்டிசோரி பள்ளியின் இளம் மழலை... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீனத்திடம் ஜப்பானியா்கள் ஆசி

தமிழ்நாட்டில் ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் நாட்டவா்கள் தருமபுரம் ஆதீனத்தை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆசி பெற்றனா். தமிழ்மொழி, கலாசாரம் குறித்தும், சித்தா்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்வதற... மேலும் பார்க்க

சமய நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

குத்தாலம் வட்டம் தேரிழந்தூரில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் சனிக்கிழமை அல் அக்ஸா நண்பா்கள் சாா்பில் சமய நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சிநடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாற்று மத ... மேலும் பார்க்க

கொலையான இளைஞா்கள் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்

முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட 2 இளைஞா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, மயிலாடுதுறையில் மது போதை பொருள் ஒழிப்பு இயக்கம் சாா்பில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

சீா்காழி பேருந்து நிலையம் முழுமையாக திறப்பு

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தின் மற்றொரு முனையத்தில் நடைபெற்ற பணிகள் நிறைவடைந்து, வெள்ளிக்கிழமை பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. சீா்காழி புதிய பேருந்து நிலையம் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்த... மேலும் பார்க்க

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை விரைந்து இயக்கம் செய்யக் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்கு அல்லது அரவைக்கு விரைந்து இயக்கம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழா... மேலும் பார்க்க