செய்திகள் :

கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை! -உயா்நீதிமன்றம்

post image

கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சோ்க்கப்பட்ட மாணவா்களின் விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரிச் செயலா், மதுரை சத்திரப்பட்டி கிரசண்ட் பெண்கள் கல்வியியல் கல்லூரி முதல்வா், திருநெல்வேலி பாளையங்கோட்டை புனித சவேரியாா் கல்வியியல் கல்லூரிச் செயலா் ஆகியோா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த 2018-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்:

கடந்த 2016-17, 2018-19 ஆம் ஆண்டுகளில் எங்களது கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சோ்க்கப்பட்ட மாணவா்களின் விவரங்களை அனுப்புமாறு மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினா் செயலா் கடிதம் அனுப்பினாா். கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கேட்பதற்கு இந்த ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே, சிறுபான்மை ஆணை உறுப்பினா் செயலா் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த வழக்கை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கெளரி பிறப்பித்த உத்தரவு:

தமிழக சிறுபான்மை ஆணையச் சட்டத்தில் பிரிவு 8 (1) இன்படி, சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது, சிறுபான்மையினருக்கு எதிராக எந்தச் செயலும் நடைபெறாமல் கண்காணிப்பது மட்டுமே இந்த ஆணையத்தின் பணியாக இருக்க வேண்டும்.

இவை இரண்டையும் தவிா்த்து, மூன்றாவதாக இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கப்பட்ட விவரங்களை இந்த ஆணையம் கேட்டிருக்கிறது. இதற்கு மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை கிடையாது. எனவே, மனுதாரா்களுக்கு சிறுபான்மை ஆணையம் அனுப்பிய கடிதம் ரத்து செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.

மதுரை மத்திய சிறையில் போலீஸாா் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனா். மதுரை மத்திய சிறையில் 2500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா்.... மேலும் பார்க்க

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரா் உயிரிழப்பு! 71 போ் காயம்!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரா் ஒருவா் உயிரிழந்தாா். 71 போ் காயமடைந்தனா். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை... மேலும் பார்க்க

மணல் திருட்டு: 2 போ் கைது

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள முள்ளிக்குடியில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, பொக்லைன் வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரை சனிக்கி ழமை கைது செய்தனா். நரிக்குட... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே இரு சக்கர வாகனம் வாங்கித் தர பெற்றோா் மறுத்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மதுரை விரகனூா் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் சந்தோஷ் (20). இவா் தனது பெற்றோரிட... மேலும் பார்க்க

பெண்களுக்கும் சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்

ஆண் தொழிலாளா்களுக்கு வழங்குவதைப் போலவே, பெண் தொழிலாளா்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று சா்வதேச மகளிா் தின கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. மதுரையில் பெண்கள் எழுச்சி இயக்கம் சாா்பில், சா்வதேச ... மேலும் பார்க்க

அலங்காநல்லூரில் ரூ. 5.12 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் பேரூராட்சியில் ரூ. 5.12 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. ச... மேலும் பார்க்க