செய்திகள் :

கல் குவாரியில் பாறைகள் சரிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரி உள்ளது.

இந்தக் குவாரியில் சுமார் 150 அடி ஆழமுள்ள பகுதியில் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பத்தூர், சிங்கம்புணரி தீயணைப்பு, மீட்புப் படையினர் பாறைக் குவியலில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

எனினும், பாறைக் குவியலில் சிக்கி கணேஷ் (45), முருகானந்தம் (47), ஆறுமுகம் (53), அர்ஜித் (28), ஆண்டிச்சாமி (52) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பொக்லைன் இயந்திர ஓட்டுநரான ஒடிஸô மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜித் உடலை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மைக்கேல் (47) சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

ஆய்வின் போது, அவருடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த நிலையில், திருநெல்வேலியிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நேரிட்ட கல் குவாரி பகுதிக்கு பொதுமக்கள் யாரையும் போலீஸôர் அனுமதிக்கவில்லை. இதனால், அங்கு போலீஸôர், பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து எஸ்.எஸ். கோட்டை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலையில் தோழி விடுதிகளை திறந்துவைத்தார் முதல்வர்!

பணிபுரியும் மகளிருக்காக பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தோழி விடுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(புதன்கிழமை) திறந்துவைத்தார். மேலும் ரூ.176.93 கோடி மதிப்பீட்டில் 14 புதிய தோழி விடுதி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிற்கான நிதி உரிமையை வெளிப்படுத்தவே தில்லி செல்கிறேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை வெளிப்படுத்தவே நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுத... மேலும் பார்க்க

சேலத்தில் நகைக்காக பெண் கொலை: 4 தனிப்படைகள் அமைப்பு

சேலம் : சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே நகைக்காக மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை, மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரம், வடதமிழக பகுதிகளி... மேலும் பார்க்க

மடுவின்கரை மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்திய காவலர் தீக்குளித்து தற்கொலை

மடுவின்கரை மேம்பாலம் அருகே போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தரமணி தலைமை காவலர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை அதிகரிப்பு! காரணம் என்ன?

அண்டை மாநிலங்களின் ஏற்பட்டுள்ள பலத்த மழையின் பாதிப்பால் கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது. மேலும் பார்க்க