செய்திகள் :

தமிழ்நாட்டிற்கான நிதி உரிமையை வெளிப்படுத்தவே தில்லி செல்கிறேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

post image

தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை வெளிப்படுத்தவே நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு நீதி ஆயோக் கூட்டம் மே 24-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வா்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா்கள், முக்கிய பொறுப்புகளை வகிக்கும் மத்திய அமைச்சா்கள் பங்கேற்பார்கள்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கூட்டத்தில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாகக் கூறி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காத நிலையில் இந்தாண்டு பங்கேற்கவிருக்கிறார். இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நீதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி தில்லி செல்கிறேன்!

சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?

'பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது' என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?

இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக் கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!

இன்றைக்குக்கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

செங்கல் மீதான ஜிஎஸ்டியைக் குறைக்க வேண்டும்: நிர்மலா சீதாராமனுடன் கனிமொழி சந்திப்பு!

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி சந்திப்பு மேற்கொண்டுள்ளார். செங்கல் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அமைச்சரிட... மேலும் பார்க்க

ரெய்டு நடப்பதைப் பார்த்து யாருக்கு பயம்? ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? ஸ்டாலின் அவர்களே- அது கண்ணாடி! … உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.நீ... மேலும் பார்க்க

அனகாபுத்தூர் ஆக்கிரமிப்பு அகற்றம்: தமிழக அரசு விளக்கம்!

அடையாறு நதியஒ சீரமைக்க அனகாபுத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் அவசியம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:அடையாறு நதியை சீரமைக்க தமிழ்நா... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கோடை வெய்யிலின் ... மேலும் பார்க்க

இறந்த யானை வயிற்றில் குட்டி யானை.. வனக் கால்நடை மருத்துவர்கள் விளக்கம்

கோவையில் நேற்று இறந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாத குட்டி சிசுவும், பிளாஸ்டிக் கழிவுகள், புழுக்கள் இருந்ததை கண்டு வன ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்த நிலையில், யானையின் உடல்கூறாய்வின்போதுதான்,... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை, கேரளத்தில் அடுத்த 3-4 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில... மேலும் பார்க்க